வாழ்வின் பொருள்....



இன்றோடு முடிவதில்லை இரவோடு மடிவதில்லை
வானம் நாம் பார்க்கும் வரை வாழ்க்கை அது ஓய்வதில்லை
இறப்பதற்கே யாரும் பிறப்பது இல்லை - ஆனால்
முற்றுபெறாத துவக்கங்கள் என்றும் அர்த்தங்கள் செய்வதில்லை


பிறப்பை போல் புதிரும் இல்லை,
இறப்பை போல் இருளும் இல்லை.
உயிரின் பொருள் உணர்ந்துவிட்டால்,
உயிர் வாழ்தலில் பொருளும் இல்லை.


கல்லறைகள் கற்பிக்கும்
படிப்பினை படித்தவன்
இழப்பையும் இழக்கிறான்
இருக்கையில் சிரிக்கிறான்


உல்லாசம் சில காலம்
உயிர் கரைந்து பல நேரம் - இன்
நியதியை உணர்ந்தவன்
நிம்மதியை ருசிக்கிறான்


மண்ணோடு விழுகையில்
நிழல்கூட நமதில்லை - நம்
உடல்கூட நிலையில்லை
நமக்காக நாம் வாழுகையிலும்

நான் என்ற சொல்லுக்கு
அர்த்தம் மட்டும் என்றுமே புரிவதில்லை

மனிதனைத் தேடி 3'ஆம் பாகம் - நிம்மதியும் வெற்றியும்



மீண்டும் ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்...

நேற்றும், இன்றும், என்றும் மனிதனின் ஆசை - நிம்மதியான ஒரு வாழ்க்கை

ஆனால் பெரும்பாலான நேரங்களில் நிம்மதி என்பது நமக்கு நரி தேடிய திரட்சைக்கனியாக எட்டாத உயரத்தில் இருக்கிறது, இதற்க்கு மிக முக்கிய காரணம் நம்மை நாம் இந்த உலகத்தில் தொலைத்துவிட்டது தான். எப்படி நமது வாழ்க்கையை நாம் தொலைத்தோம்? பின் வரும் கட்டுரையை படித்துப் பார்த்தல் உங்கள் வாழ்க்கையின் கடந்த காலமும் நிகழ் காலமும் உங்கள் கண்முன்னே நிழலாடும், அப்பொழுது வாழ்க்கையை நாம் தொலைத்துவிட்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.

வாழ்க்கையை இப்படி வகுத்துக் கூறலாம்:-
நமது தேவை இன்னது என்பதை நாம் அறியாதவர்களாய் பல காலம்,
நமது தேவை இது என்று எண்ணி தவறான ஒரு தேடலில் இறங்கி பின் தெளிவுற்று பின்வாங்கி சில காலம்
நமது தேவை இன்னது என்று அறிந்திருந்தும், சூழ்நிலையின் காரணமாக நமது தேவையை மறந்து அல்லது மறுதலித்து சில காலம்,
நமது தேவை இன்னது என்று அறிய வரும் காலத்தில் நமது பருவங்கள் கடந்து விட்ட வருத்தத்தில் சில காலம்

நமது வாழ்க்கையின் கடந்த காலத்தை புரட்டிப் பார்க்கையில் இப்படித்தான் பல தோல்விகளும் வருத்தங்களும் நமக்கு மிஞ்சும்.... எட்டி இருக்கும் கணியை எட்டி பிடித்த வெற்றியாளர்கள் இந்த உலகத்தில் கொஞ்சமே, அவர்களை சந்தனையளர்கள் என்று உலகம் அழைக்கிறது, எஞ்சியவர்கள் சாமான்யன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இப்படி சாமான்யன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதர்களின் ஆழ் மனதில் ஆறாத ஒரு வேதனை என்றுமே நிலைத்திருக்கும், அது அவன் தேடிய அவனது தேவை அவனுக்கு கிடைகாது போன வருத்தம், இந்த வருத்தம் தான் ஒரு மனிதனை நிம்மதி எங்கே என தேடசெய்கிறது....

உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டு பாருங்கள் நண்பர்களே, இன்று உங்களிடம் இருக்கும் உறவுகள், உடமைகள் உங்களுக்கு நிம்மதியை தருகிறதா என்று, பலருக்கு இதன் பதில் இல்லை என்றே தோன்றும் காரணம் நீங்கள் உங்களுக்கு வாய்த்தவற்றைக் கொண்டு வாழ பழகிக்கொண்ட சாமான்யன்கள். உங்களின் தேவைகளையும், தேடல்களையும் உங்களின் சூழ்நிலையால் மறுதலிக்கக் கற்றுக்கொண்ட உலகவாசிகள். இப்படி வாழ்வோர் தண்ணீருக்குள் அழும் மீனை போன்றவர்கள், உங்களின் வேதனையை நீங்கள் புன்னகை என்ற வர்ணம் பூசி மறைத்துக்கொள்ள தெரிந்த மந்திரவாதிகள்.

நமக்கு பற்றற்ற ஒரு சூலில் நம்மை நாம் புகுத்திக்கொள்வதால் நமக்குக் கிடைப்பது நிம்மதியற்ற வாழ்க்கை மட்டுமே. அலைகளை மோதிக் கிழிக்கும் கப்பல் மட்டுமே கரை சேரக்கூடும், நிலத்தை முட்டி முளைக்கும் விதைகள் மட்டுமே மரமாகக் கூடும்.

நண்பர்களே வெற்றியாளர்களை யாரும் பிறப்பால் செய்துவிடுவதில்லை, ஒவ்வொரு வெற்றியாளனும் தன்னுடைய தேடலை அறிந்தவனாய் இருக்கிறான் அந்த தேடலில் தன்னை முழுமையாக செளுத்திக்கொள்கிறான். நாமும் வெற்றிபெற நிமதியை நம் மனதிர்க்குதர நான் செய்யவேண்டியது இதுதான். நமது வாழ்க்கையின் பற்று இன்னது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அதை அறிந்து கொண்ட மறுகணமே அந்த பற்றுக்கான தேடலில் நம்மை நாம் செலுத்த வேண்டும். ஒரு நேர்த்தியான மாலுமி கப்பலை செளுதுவதைபோல நாமும் நமது வாழ்க்கையை நமக்கு பற்றுமிக்க செயலில் செலுத்தினால் நிம்மதியும் வெற்றியும் என்றுமே எந்த மண்டிதனுக்குமே எட்டாத கணியல்ல.

வாருங்கள் தோழர்களே நிம்மதி என்பது உலகெங்கும் உங்களுக்காகக கொட்டிக்கிடகின்றது ஆனால் உங்கள் விழிகளில் தான் ஏதோ ஒரு திரை விழுந்து நிம்மதியை மறைக்கின்றது. உங்களின் விழித்திரையை விசலமாக்குங்கள், அகச்சிரையை உடைத்தெறியுங்கள் நிம்மதியை சுவைத்து மகிழுங்கள்.

நிம்மதியாய் வாழ்ந்திட உனது தேவையை முதலில் அறிந்துகொள் பின் உனது தேவையை அடைய உன்னை நீ தயார் செய்துகொள் பிறகு வாழ்க்கை களத்தில் நம்பிக்கையோடு போராடு நிச்சயம் வெற்றியும் நிம்மதியும் உனக்கு என்றுமே உடனிருக்கும்...

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்....நன்றிகள்

உனக்காகவே நீ...




அவனும் இவனுமல்ல
உன் வாழ்வை செதுக்குதல் நீயே
அகமும் புறமுமென
உன் வலிகள் சும்மப்பது நீயே

உச்சாணிக்கொம்பில் நீ ஏறி நின்றால்
ஊரார் உன்னை சிரமேற்றிச் சுமப்பர்
தவறி நீ கீழே வீழ்ந்தால்
தவறு உணதென்பர்

சமுதாயம் சிரிக்குமே
உலகமுனை பழிக்குமே - என
எண்ணி வாடுதல் வீணே தோழா!!!

காலம் கரைந்துபோனால்
காற்றாய் மறைந்து போகும்
சுற்றம் முற்றமெல்லாம்
வெறும் கானல் நீரைப்போல

வா வாழ்ந்துவிடு உனக்காக
நீ நீயென்பது மட்டும் நிஜமாக....

கோவமேனும் பெருங்கடல்....


ஆழிசெய் யோசை தனையோப்ப
அகங்காரம் மனதுக்குள்
ஆரவாரம் செய்திடுமே ...

அனல் கக்கும் எரிமலையின் தனலோப்ப
விழி வழியே கோபத்தீ
வழிந்தோடிடுமே...

மடைமீண்ட அனைவெள்ளம் தனையோப்ப
கடும் சொற்கள்
இதழ் மடை கடந்திடுமே..

அமைதியெனும் ஆண்டவனை
மறந்திட்ட பொழுதுகளில்
முன் சொன்ன மூன்றுமே
ஒருசேர நிகழுமே

கோவத்தால் தொலைத்த ஞானத்தால்
கொட்டிய சொல் மீண்டும்
கை சேர்வதில்லை...
செய்திட்ட தீங்கும் எளிதில்
நீங்குவது இல்லை

அறிவே நல்லறிவே நீ அழிந்ததும் ஏனோ?
மதியே நுன்மதியே நீ மறைந்ததும் ஏனோ?

கோவமேனும் கடலுக்குள்
குதித்திட்ட மனிதன்
பிறனையும் கொன்றான்
தானும் மாண்டான்

தொலைந்து போ கோவமே
உன்மீது மனித இனமே கோவமாய் உள்ளது
மறைந்து போ கோவமே
உன்னாலே கலைந்திட்ட உறவுகளின் கூற்றிது

கோவமேனும் கடல் கடக்க - மானுடா
அமைதியெனும் படகை பிடி
அமைதியிலே நீ நிலைக்க - மானுடா
உன்னையே நீ படி....

உறவுகொள்!!!



உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்
உன்னதமாய் உறவுகொள்
உலகோடு உறவுகொள்

கடலோடும் அலையோடும்
காற்றோடும் மலரோடும்
உறவுகொள்
இன்பத்தை உணர்ந்துகொள்ள
இயற்கையோடு உறவுகொள்

ஒலியோடும் ஒளியோடும்
விசையோடும் வினையொடும்
உறவுகொள்
அறிவியலை அறிந்துகொள்ள
நின் அறிவோடு நீயே உறவுகொள்

நித்திரையின் சுகமறிய
உழைப்போடு உறவுகொள்
வறுமையின் சுமையரிய
பசியோடு உறவுகொள்

மானோடும் உறவுகொள்
மீனோடும் உறவுகொள்
குயில் குரலில் நீ பட
மயில் போல நடமாட
குயிலோடும் உறவுகொள்
மயிலோடும் உறவுகொள்

நூலோடு உறவுகொள்ள
நின் நுண்ணறிவை உணர்ந்துகொள்
வேலோடு உறவுகொள்
உன் வீரமதை தெரிந்துகொள்

நட்பின் நலமறிய
நெஞ்சோடு நட்புகொள்
நட்போடு உன் நண்பனோடு உறவுகொள்

உறவுகொள் உறவுகொள்
உலகோடு உறவுகொள்

“பூமி தொடும் முன்பே கொலை செய்யப்பட்டவன்”

மலராத மொட்டுக்கள் - இவை
மலரும் முன்னமே
கல்லறை அடைந்தவை...

இந்த பதிவும் அத்தகைய கல்லறையில் உறங்கும் மலராத மொட்டுக்களை பற்றித்தான்...

சின்ன சின்னதாய் - 2


கருவுற்றிருந்தால் - நீ
ஒரு பிள்ளைக்கு தாய்,
கருணையுற்றதால் - நீ
உலகிற்கே தாய்
அன்னை தெரேசா!!!


சட்டையும் காலுறையும்
பொதுவாகிப் போனதால்- தனி
அடையாளம் தேடுகிறோம்...
ஆண்கள்!!!

முயற்சிக் கதவுகளையல்ல
தேடல் ஜன்னல்களையேனும் திறந்துவிடு
உன் வாழக்கையில் வர காத்திருக்கிறேன்
வாய்ப்பு!!!

கலாச்சாரத்தின் கற்பழிப்பு,
காலதேவனின் ஆடை அவிழ்ப்பு
நாகரீகம்!!!



வரி வழியே அரசாங்கம் வாழ
குடி வழியே மக்களை கொள்ளும்
மழிவு விலை அநியாயக் கடை
டாஸ்மாக்!!!







விதி என்ன செய்யும்???

விதிக்குள் முடங்கி விடும் மனிதனை துயிலெழுப்ப ஒரு பதிவு..

யார் இங்கே துறவி?



முற்றும் துறந்த முனிவர்கள் இன்று முழுதும் திறந்து காண்பிக்கும் கட்சிகள் கணினி வழியே நிரம்ப துவங்கி விட்டது. காவிக்குள் ஒளிந்து கொண்டு காம பசி தீர்துக்கொண்டும் வாழும் துறவிகள் இன்று அதிகம் பெருகி விட்டனர், இதற்க்கு காரணம் கேட்டால் ஏமாறும் மனிதர்கள் என்று துறவிகளும், ஏமாற்றும் துறவிகள் என்று சாமான்னியனும் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் இங்கே துறவி என்னும் ஒரு சொல்லுகே இடம் இல்லை காரணம் துறவிகள் உடலின் சாதாரண தேவையான உணவையும் கூட துச்சமாக மதிப்பவர்கள், அனால் இன்றைய காவி உடை மனிதர்களோ கார், பங்களா, பகட்டான உணவு, அழகான சிஷ்யைகள் என சுகபோக வாழ்கை வாழும் மாடர்ன் ஆசாமிகள்.

ஒரு மனிதன் தன் மனித வாழ்வில் பற்று இழக்கும் பொழுது ஏதோ ஒரு சில பதில் தெரியாத தேடலில் இறங்குகிறான் அந்த தேடல் அவனை பெரும்பாலும் கொண்டு சேர்க்கும் இடம் தனிமை. இந்த தற்காலிக தனிமையை பெரும்பாலனோர் ஏதோ ஆன்மிக தளமாக என்னிகொள்ளும் விபரீதம் தான் இந்த துறவிகள் எனும் கபட நாடகத்தின் மூல காரணம். மேலும் இன்றைய மனிதர்கள் மிகவும் விளம்பரதாரிகள் புரியாத வார்த்தைகளாலும் பல அழகான பேச்சுகளாலும் மக்களை கவர்வது மிகவும் எளிதாகி விட்டது இப்படி பேச்சு திறனில் பளிச்சிடுபவர்கள் புகழ் பெற நினைக்கும் பொழுது அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த காவி உடை. இப்படி காவி தரிக்கும் தற்காலிக துறவிகள் செய்யும் தவறுகள் அவர் சார்ந்த சமயத்தின் மீதும் களங்கத்தை சுமத்துகிறார்கள். காவியும் வெண்மையும் தூய்மையின் நிறங்கள் அதனாலையே தான் துறவிகள் அந்த நிறத்தை ஆடையென தரிக்கிறார்கள், இந்த ஆடையை தரித்துக்கொண்டு தான் இன்று துறவிகள் பலபொல்லாத காரியங்கள் செய்து வருகிறார்கள்.

புலனடக்கமும் மன அடக்கமும் துறவிகளின் முக்கிய அறமாகும் இதை எளிதில் மறந்து விடும் இன்றைய துறவிகள் 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மற்றவர்கள் நுழைந்து பார்க்க அவசியம் இல்லை' என்கிறார்கள். செய்வதை செய்துவிட்டு இவர்கள் கொட்டும் சப்பைகட்டுகளுக்கு மனிதர்கள் பலரும் மண்டை அசைப்பது அதனினும் கொடுமை. உண்மை துறவிகள் தன்னலம் மறந்தவர்கள், அவர்களுக்கு அவர்களுடைய இச்சைகள் கண்முன்னே நிற்ப்பதில்லை, அவர்களின் உறக்கத்திலும் கூட உறுப்புகள் அவர்களை உறுத்தாது. ஆனால் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தேனொழுக பேசும் துறவிகளை கண்டால் கால ஆண்டு தொலைவு ஓடும் அளவிற்கு பயமாக இருக்கிறது. உண்மையில் இவர்களின் துறவறத்தில் அடிப்படை தவறு இருக்கிறது. எந்த ஒரு விஷயம் ஒரு மனிதனுக்கு மறைத்து வைக்கப்படுகின்றதோ அதை ஆராய்ந்து பார்க்கும் 'EXPLORING MIND' மனிதனின் இயல்பான விஷயம். காமம் என்பது இந்த துறவிகளுக்கு திகட்டாத அளவிலும் தேடி சுவைக்கதூன்டாத அளவிலும் கற்றுகொடுக்க பட வேண்டும். சுவைகளை சுவைத்து பார்த்தால் தான் அதன் அம்சங்களை சொல்ல முடியும் அதனால் காமத்தின் அளவுகோலை இந்த துறவிகளுக்கு அளவாக அறிய செய்ய வேண்டும் பின் அதை தவிர்பதின் காரணத்தை அழுத்தமாக புரிய வைக்க வேண்டும். வேதங்களை மட்டும் படிக்கும் துறவிகள் வேதத்திலும் அதைவிளக்கும் வேதாந்தத்திலும் சிறந்து விளங்கியும் சுயக்கட்டுபாட்டை இழக்க நேருவதால் துரவுத்தன்மையை இழக்க நேரிடுகின்றது எனவே காமத்தின் மீது இருக்கும் தாகத்தை தீர்க்க இவர்களின் புலனடக்கத்தின் மேன்மையை கற்று கொடுக்க ஆதீனங்களும் துறவு மடங்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். யார் எந்த மொழி கூறினாலும் அதை அப்படிஏய் ஏற்றுக்கொள்ளாமல் நமது சுய அறிவிற்குள் கொஞ்சம் செலுத்தி ஆராய்ந்து எடுத்துக்கொள்ள சாமான்யர்கள் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். துறவிகளை குற்றம் சொல்ல தேவை இல்லை காரணம் நம்மை பக்குவ படுத்திக்கொள தேவையான திறன்கள்அனைத்தும் தனி மனிதனிடமும் கொட்டிகிடக்கின்றது அதை தேடி பிடிப்போம் நமக்கு தேவையான அகசிந்தனைகளை நமக்குள் இருந்தே நாம் பெற்றெடுப்போம்

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கமிலஸ்.

என் அன்னைக்கு...



என் உயிருக்கு உரியவள் நீயம்மா
என் உயிரும் கூட நீயே அம்மா

ஈரைந்து மாதங்கள் உனக்குள் வைத்தாய் - எனை
ஈன்ற பின்பும் உன் கண்ணுக்குள் வைத்தாய்

எனக்காக நீ துஞ்சாத இரவுகள் கொண்டு
ஒரு நூற்றாண்டு செய்திடுவான் கடவுள் இன்று.

மழலை மொழி மறந்து நான் செப்பிய முதல் சொல் நீ
அழுகை சுமை மறக்க என்றும் நான் சொல்லும் சொல் நீ

உலகின் அழகிகள் உன் போல் இல்லை - என் தாயே
நீயன்றி எனக்கு இவுலகமே இல்லை

என் பிஞ்சு பாதங்கள் உனை மிதித்த வேளையிலும்
என் நஞ்சு மொழிகள உன்னை சுட்ட பொழுதிலும்
எனக்காக எனைக்காக்க எல்லாம் செய்தவள் நீயம்மா

மழலை காலத்தில் உன் தோளில் சாய்ந்தேன்
நான் மடியும் வேலையும் அதைத்தர இறைவனிடம் கேட்பேன்

எதை நான் செய்தேன் உனை தாயாக பெறுவதற்கு
எதை நான் செய்வேன் மறுபிறப்பில் உன் மகனாக பிறப்பதற்கு...

பாரதத் திருதேசமே....


நற்வேதம் நாற்க் கொண்டு
இன்ன பிற நூற்க்கொண்டு
நுண்ணறிவு வளர்த்ததெம்
பாரதத் திருத்தேசமே

பொங்கும் பல நதியுண்டு
எங்கும்நிறை அன்புண்டு
பச்சை நிற மேனிக்குள் எம்
பாரதத் திருத்தேசமே

ஆழிப் பெருங்கடல் முப்புறம் காக்க
ஆயப் பெருமலை மறுபுறம் நிற்க
தூய நெறி பல தன்னுள் கொண்டதெம்
பாரதத் திருத்தேசமே

தோல் நிறம் தொன் மொழி பேதங்கள் கொண்டிருந்தும்
அந்தணர் அரிசனர் வேற்றுமை தானிருந்தும்
பூந்தளிர் கேளீராய் மானிடர் வழ்வதெம்
பாரதத் திருத்தேசமே

அறவழி நெறிகொண்டு விடுதலை கொண்டதும்
வீரத்தின் வழிநின்று அறநெறிக் காப்பதும்
உயர்திணை மண்கொண்ட எம்
பாரதத் திருத்தேசமே

இமையத்தின் குளிரிலும் கடும்பாலையின் தகிப்பிலும்
இன்னுயிர் தந்து எம் நுண்ணுயிர் காக்கும்
வீரத்தின் புதல்வர்கள் ஈன்றதெம்
பாரதத் திருத்தேசமே

கணிப்பொறி காலத்தில் அறிவியற் ஞாலத்தில்
விண்தொட்ட விண்கலம் படைத்ததும்
நுன்னுன்னி உயிருக்குள் ஆய்வுகள் ஆண்டதுவும் எம்
பாரதத் திருத்தேசமே

இனி ஒருதேசம் என் தேசம் போல் வருமோ?
உள்செல்லும் சுவாசம் என் இந்தியக்காற்றைப் போல் தருமோ?
வாழிய என் தேசம் வளரட்டும் அதன் மீது நம் நேசம்...

மனிதனைத்தேடி (இரண்டாம் பதிவு) 'நான் என்ற உணர்வு ஒரு பாடம்'


பெரும்பாலான நேரங்களில் நாம் சுயநலவாதிகளாக இருப்பதற்கு கரணம் இந்த ' நான்' என்கிற உணர்வு, ஆனால் பல வேளைகளில் ஒரு மனிதனின் தன்னம்பிக்கையின் அளவுகோலாகவும் இந்த 'நான்' என்கிற உணர்வு செயல் படுகின்றது. கருத்து பரிமாற்றங்களின் பொது பலரும் தங்களது கருத்துக்களை முன்னிறுத்தி பேசுவதையும் அக்கருத்துக்களை மற்றவர்கள் மறுத்து பேசுவதையும் நாம் கவனித்திருக்கக்கூடும், இப்படி மனிதர்கள் தங்களது கருத்துக்களை வெளி படுத்தும் வேளையில் 'நான்' என்கிற உணர்வு அதிகம் வெளிப்படும் ஆனால் இந்த சூழ்நிலையில் வெளிப்படும் 'நான்' என்கிற உணர்வு ஆக்கப்பூர்வமானதாகவே இருக்கும், காரணம் இங்கே நிகழும் கர்ருத்துப்பரிமற்றத்தல் வரும் பயன் நன்மையாக இருக்கிறது, இன்றைய பல அறிவியல் மற்றும் ஆண்நிமிக கோட்பாடுகள் இப்படிப்பட்ட கருதுப்பரிமற்றன்களால் நிகழ்ந்ததவைகள் தான்.

ஒரு மரம் வளர நாம் அதன் வேறிற்கு நீர் இறைகின்றோம், ஆனால் அந்த நீரை வேறிடம் இருந்து மற்ற பாகங்கள் உள்வங்கிக்கொல்வதன் விளைவு தான் ஒரு மரத்தின் முழு வளர்ச்சி.அதாவது வேர் வழியே செல்லும் நீரை இலைகளும், கிளைகளும், மற்ற பிற பாகங்களும் தத்தம் தேவைக்கு ஏற்ப பிரித்து எடுத்து கொள்கின்றது, இந்த ஒரு நிகழ்வு, 'நான்' வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நிகழும் ஒரு நிகழ்வு இதன் காரணமாக முழு மரமும் செழிப்படைகின்றது. மேற்கூறிய மரத்தை போலவே இன்றைய சமுதையத்தின் வளர்ச்சியும் இருக்கின்றது, 'நான்' வளமுடன் வாழ வேண்டும் என நினைத்து ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்கிறான் இதன் விளைவு பல தனி மனிதர்களின் வளர்ச்சி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக மாறுகின்றது. ஆனால் இந்த வளர்ச்சி பல நேரங்களில் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் போவதற்கு காரணம், சுயநலத்தின் அலுவுகோல் அதிகமாவது தான்.

'நான்' வாழவேண்டும் என ஒரு தனி மனிதன் நினைப்பது ஆக்கப்பூர்வமே, ஆனால் 'நான்' மட்டுமே வாழ வேண்டும் என்ற நினைப்போடு இருக்கும் பொழுது அது அழிவை ஏற்ப்படுத்துகின்றது. நம் வாழ்நாளில் தினமும் பல தடைகளை கடக்கிறோம், இந்த தடைகளை கடக்கும் வேளைகளில் நம் படிக்கற்கள் மற்ற மனிதர்க்கு தடைக்கல்லாய் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் வரையில், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வு நமக்கும் இந்த சமுதையதிர்க்கும் நன்மையே பயக்கும்.

நாம் பல வேளைகளில் மற்ற மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்களை நாம் மதிப்பீடு செய்வதுண்டு, அப்படி நம்மை நாம் எத்தனை முறை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்? உண்மையில் நம்மை நாம் மதிப்பீடு செய்ய அஞ்சுகிறோம், நான்' என்கிற எண்ணம் நம்மதுக்குள் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதால் நாம் பல வேளைகளில் மற்றவர்களுக்கு தடையாய் இருக்கிறோம், இதன் காரணமாய் நம்மை நாம் மதிப்பீடு செய்ய மறுதலிக்கிறோம், நாம் செய்யும் தவறை நமக்கு நாமே சுட்டிக்காட்டிக்கொள்ள மறுக்கிறோம்.' நான்' என்கிற உணர்வு அதிகமாக உருவகம் எடுக்கும் பொழுது அது ஒரு போதையாகி போகின்றது நாமும் அந்த போதைக்கு அடிமையாகி விடுகின்றோம். நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்ளும் வேலைய்களில் இந்த போதையின் அளவை நாம் குறைத்துக்கொள முடியும், நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற எண்ணமும் அளவைக்குள் அடங்கி ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.

- என்றாவது ஒரு நாள் மற்ற மனிதனின் கண்ணீருக்கு நான் காரணமாக இருந்து இருகிறேனா?
- நான் முன்னேற ஏதேனும் மனிதனுக்கு தடையை ஏற்ப்படுத்தி இருகிறேனா?

இதுபோன்ற கேள்விகளை நமக்குள் நாம் நிதம் கேட்டு கொண்டு நம்மை நாம் மதிபிட்டுக்கொள்ளும் வேளைகளில் நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற உணர்வு கட்டுக்குள் இருக்கும், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வும் மற்றவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

எனவே நம் தனிமை பொழுதுகளில் நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்வோம், மற்ற மனிதருக்கு நாம் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

மனிதனைத்தேடி (முதல் பதிவு) "நான் என்ற சொல்லின் பிறப்பு"


'நான்' - இந்த சொல் மனித வாழ்க்கையில் அழிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது, இந்த 'நான்' என்ற சொல் எதை குறிக்கிறது என்ற தேடலில் உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மனித இனம் குலம்பிக்கொண்டிருகிறது. மடிந்து போவதற்காக எந்த மனிதனும் பிறப்பதில்லை ஆனால் மரணம் வராத மனிதன் இது வரை உலகத்தில் பிறந்ததில்லை இனிமேலும் அப்படி ஒரு மனிதன் பிறக்க போவதில்லை, பின்எதற்க்காக இந்த மனித வாழ்க்கை? எதற்க்காக இந்த 'நான்' என்ற தேடல்கள்? எதற்க்காக உறவுகள்? இந்த கேள்விக்கான ஒரு சிறு அலசல் தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

உலகத்தில் உயிரினங்கள் வாழத்தொடங்கிய காலத்தில் நிச்சயம் மனிதனும் ஒரு மிருகமாகத் தான் இருந்திருப்பான், ஆனால் அவனது இந்த 'நான்' என்ற தேடல் அவனை மற்ற உயிரினங்களில் இருந்து மாறுபடுத்தி அவனை நாகரீகமாக்கியது. ஆம், ஒவ்வொரு மனிதனுக்குளும் இருக்கும் இந்த 'நான்' என்ற எண்ணம் தான் மனித இனத்தை பன்படுத்தியது. உறுப்புகளின் அமைப்புகளிலும், உடற்க்கூருகளின் அமைப்பாலும் மனிதர்கள் நாம் ஒரே போல இருக்கிறோம் அதாவது ஐம்புலன்களும், கைகால்களும், உடலுக்குள் இருக்கும் உறுப்புகளும் அனைத்து மாந்தருக்கும் ஒரே போல தான் இருக்கின்றது அனால் இந்த உடல் உருபுகளின் சிறு சிறு மாற்றங்கள், அளவைகளில் மாற்றங்கள் காரணமாக ஒரு ஒரு மனிதருக்குள்ளும் வேறுபட்டு இருக்கிறோம், குப்பன் சுப்பனை போல இருப்பதில்லை, கந்தன் வேலணை போல இருப்பதில்லை இந்த வேறுபாடு தான் 'நான்' என்ற சொல் பிறக்க முதல் கரணம். ஒரு ஒரு மிருகமும் பிரிக்க பட்டு இருப்பது அதன் உடற்க்கூருகளின் அடிப்படையில் தான் அதே போல மனித இனமும் தனக்குள் தானே பிரிந்து இருக்கிறது இந்த பிரிவு மனிதனின் ஆழ் மனதுக்குள் ஏற்படுத்தும் ஒரு உணர்வு தான் 'நான்' என்கிற உணர்வு.

பிறக்கும் பிள்ளையோடு ஒட்டிக்கொண்டு பிறக்கிறது இந்த 'நான்' என்கிற உணர்வு, வளரும் வேளையில் நான் மற்றவர்களை விட வலுவானவன் என்பதை உணர்த்த நிதமும் வெளிப்படுகின்றது இந்த 'நான்' என்கிற உணர்வு, வளந்து விட்ட வயதில் 'நான்' அனுபவத்தில் சிறந்தவன் என்று உணர்த்த வருகிறது இந்த 'நான்' என்கிற உணர்வு, மடியும் வேலையில் நான் வாழ்கையை முடித்து விட்டேன் இன் வரும் காலம் என்னை பேசட்டும் என வருகிறது 'நான்' என்கிற உணர்வு. இப்படி வாழ்க்கையோடு ஒட்டி போய்விட்ட இந்த 'நான்' என்கிற உணர்வை பற்றிய நீண்ட நெடும் அலசல்கள் தான் இனி வரும் பதிவுகளில் தொடர இருக்கின்றது. 'நான்' என்கிற உணர்வு எப்படி மனிதனுக்குள் பிறக்கின்றது என்பதை சற்றே உணர்ந்திருப்போம் இனி வரும் பதிவுகள் மூலம் 'நான்' என்கிற இந்த உணர்வு மனிதனுக்குள் நடத்தும் மாற்றங்களையும், போராட்டங்களையும் பற்றிபேசுவோம்.

மனிதனைத்தேடி


புதிய ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி, 'மனிதனைத்தேடி' இது இந்த பதிவின் தலைப்பு மட்டும் அல்ல பொருளடக்கமும் கூட. பிறக்கும் மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் பல கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தது அந்த கேள்விகளுக்கு எனக்குள் நான் எழுதிக்கொண்ட பதில்கள் தான் இந்த 'மனிதனைத்தேடி' என்கிற பதிவு.

இந்த பதிவை பல பகுதிகளாக கிறுக்குகிறேன்...எனக்குள் எழுந்த கேள்விகள் உங்களுக்குளும் எழலாம், அப்படி உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள் வரும் வேலையில் இந்த பதிவின் சில பகுதிகள் நிச்சயம் உங்களுக்கு உகந்தவையாக இருக்கும் என நம்புகிறேன்.
தொடர்ந்து வரும் பகுதிகளை படியுங்கள் என்னுடன் சேர்ந்து வாழ்கையின் தேடலில் கலந்துகொள்ளுங்கள்.

இவன்
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்