
நற்வேதம் நாற்க் கொண்டு
இன்ன பிற நூற்க்கொண்டு
நுண்ணறிவு வளர்த்ததெம்
பாரதத் திருத்தேசமே
பொங்கும் பல நதியுண்டு
எங்கும்நிறை அன்புண்டு
பச்சை நிற மேனிக்குள் எம்
பாரதத் திருத்தேசமே
ஆழிப் பெருங்கடல் முப்புறம் காக்க
ஆயப் பெருமலை மறுபுறம் நிற்க
தூய நெறி பல தன்னுள் கொண்டதெம்
பாரதத் திருத்தேசமே
தோல் நிறம் தொன் மொழி பேதங்கள் கொண்டிருந்தும்
அந்தணர் அரிசனர் வேற்றுமை தானிருந்தும்
பூந்தளிர் கேளீராய் மானிடர் வழ்வதெம்
பாரதத் திருத்தேசமே
அறவழி நெறிகொண்டு விடுதலை கொண்டதும்
வீரத்தின் வழிநின்று அறநெறிக் காப்பதும்
உயர்திணை மண்கொண்ட எம்
பாரதத் திருத்தேசமே
இமையத்தின் குளிரிலும் கடும்பாலையின் தகிப்பிலும்
இன்னுயிர் தந்து எம் நுண்ணுயிர் காக்கும்
வீரத்தின் புதல்வர்கள் ஈன்றதெம்
இன்ன பிற நூற்க்கொண்டு
நுண்ணறிவு வளர்த்ததெம்
பாரதத் திருத்தேசமே
பொங்கும் பல நதியுண்டு
எங்கும்நிறை அன்புண்டு
பச்சை நிற மேனிக்குள் எம்
பாரதத் திருத்தேசமே
ஆழிப் பெருங்கடல் முப்புறம் காக்க
ஆயப் பெருமலை மறுபுறம் நிற்க
தூய நெறி பல தன்னுள் கொண்டதெம்
பாரதத் திருத்தேசமே
தோல் நிறம் தொன் மொழி பேதங்கள் கொண்டிருந்தும்
அந்தணர் அரிசனர் வேற்றுமை தானிருந்தும்
பூந்தளிர் கேளீராய் மானிடர் வழ்வதெம்
பாரதத் திருத்தேசமே
அறவழி நெறிகொண்டு விடுதலை கொண்டதும்
வீரத்தின் வழிநின்று அறநெறிக் காப்பதும்
உயர்திணை மண்கொண்ட எம்
பாரதத் திருத்தேசமே
இமையத்தின் குளிரிலும் கடும்பாலையின் தகிப்பிலும்
இன்னுயிர் தந்து எம் நுண்ணுயிர் காக்கும்
வீரத்தின் புதல்வர்கள் ஈன்றதெம்
பாரதத் திருத்தேசமே
கணிப்பொறி காலத்தில் அறிவியற் ஞாலத்தில்
விண்தொட்ட விண்கலம் படைத்ததும்
நுன்னுன்னி உயிருக்குள் ஆய்வுகள் ஆண்டதுவும் எம்
பாரதத் திருத்தேசமே
இனி ஒருதேசம் என் தேசம் போல் வருமோ?
உள்செல்லும் சுவாசம் என் இந்தியக்காற்றைப் போல் தருமோ?
வாழிய என் தேசம் வளரட்டும் அதன் மீது நம் நேசம்...
கணிப்பொறி காலத்தில் அறிவியற் ஞாலத்தில்
விண்தொட்ட விண்கலம் படைத்ததும்
நுன்னுன்னி உயிருக்குள் ஆய்வுகள் ஆண்டதுவும் எம்
பாரதத் திருத்தேசமே
இனி ஒருதேசம் என் தேசம் போல் வருமோ?
உள்செல்லும் சுவாசம் என் இந்தியக்காற்றைப் போல் தருமோ?
வாழிய என் தேசம் வளரட்டும் அதன் மீது நம் நேசம்...
No comments:
Post a Comment