
அவனும் இவனுமல்ல
உன் வாழ்வை செதுக்குதல் நீயே
அகமும் புறமுமென
உன் வலிகள் சும்மப்பது நீயே
உச்சாணிக்கொம்பில் நீ ஏறி நின்றால்
ஊரார் உன்னை சிரமேற்றிச் சுமப்பர்
தவறி நீ கீழே வீழ்ந்தால்
தவறு உணதென்பர்
சமுதாயம் சிரிக்குமே
உலகமுனை பழிக்குமே - என
எண்ணி வாடுதல் வீணே தோழா!!!
காலம் கரைந்துபோனால்
காற்றாய் மறைந்து போகும்
சுற்றம் முற்றமெல்லாம்
வெறும் கானல் நீரைப்போல
வா வாழ்ந்துவிடு உனக்காக
நீ நீயென்பது மட்டும் நிஜமாக....
No comments:
Post a Comment