மனிதனைத்தேடி (இரண்டாம் பதிவு) 'நான் என்ற உணர்வு ஒரு பாடம்'


பெரும்பாலான நேரங்களில் நாம் சுயநலவாதிகளாக இருப்பதற்கு கரணம் இந்த ' நான்' என்கிற உணர்வு, ஆனால் பல வேளைகளில் ஒரு மனிதனின் தன்னம்பிக்கையின் அளவுகோலாகவும் இந்த 'நான்' என்கிற உணர்வு செயல் படுகின்றது. கருத்து பரிமாற்றங்களின் பொது பலரும் தங்களது கருத்துக்களை முன்னிறுத்தி பேசுவதையும் அக்கருத்துக்களை மற்றவர்கள் மறுத்து பேசுவதையும் நாம் கவனித்திருக்கக்கூடும், இப்படி மனிதர்கள் தங்களது கருத்துக்களை வெளி படுத்தும் வேளையில் 'நான்' என்கிற உணர்வு அதிகம் வெளிப்படும் ஆனால் இந்த சூழ்நிலையில் வெளிப்படும் 'நான்' என்கிற உணர்வு ஆக்கப்பூர்வமானதாகவே இருக்கும், காரணம் இங்கே நிகழும் கர்ருத்துப்பரிமற்றத்தல் வரும் பயன் நன்மையாக இருக்கிறது, இன்றைய பல அறிவியல் மற்றும் ஆண்நிமிக கோட்பாடுகள் இப்படிப்பட்ட கருதுப்பரிமற்றன்களால் நிகழ்ந்ததவைகள் தான்.

ஒரு மரம் வளர நாம் அதன் வேறிற்கு நீர் இறைகின்றோம், ஆனால் அந்த நீரை வேறிடம் இருந்து மற்ற பாகங்கள் உள்வங்கிக்கொல்வதன் விளைவு தான் ஒரு மரத்தின் முழு வளர்ச்சி.அதாவது வேர் வழியே செல்லும் நீரை இலைகளும், கிளைகளும், மற்ற பிற பாகங்களும் தத்தம் தேவைக்கு ஏற்ப பிரித்து எடுத்து கொள்கின்றது, இந்த ஒரு நிகழ்வு, 'நான்' வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நிகழும் ஒரு நிகழ்வு இதன் காரணமாக முழு மரமும் செழிப்படைகின்றது. மேற்கூறிய மரத்தை போலவே இன்றைய சமுதையத்தின் வளர்ச்சியும் இருக்கின்றது, 'நான்' வளமுடன் வாழ வேண்டும் என நினைத்து ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்கிறான் இதன் விளைவு பல தனி மனிதர்களின் வளர்ச்சி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக மாறுகின்றது. ஆனால் இந்த வளர்ச்சி பல நேரங்களில் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் போவதற்கு காரணம், சுயநலத்தின் அலுவுகோல் அதிகமாவது தான்.

'நான்' வாழவேண்டும் என ஒரு தனி மனிதன் நினைப்பது ஆக்கப்பூர்வமே, ஆனால் 'நான்' மட்டுமே வாழ வேண்டும் என்ற நினைப்போடு இருக்கும் பொழுது அது அழிவை ஏற்ப்படுத்துகின்றது. நம் வாழ்நாளில் தினமும் பல தடைகளை கடக்கிறோம், இந்த தடைகளை கடக்கும் வேளைகளில் நம் படிக்கற்கள் மற்ற மனிதர்க்கு தடைக்கல்லாய் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் வரையில், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வு நமக்கும் இந்த சமுதையதிர்க்கும் நன்மையே பயக்கும்.

நாம் பல வேளைகளில் மற்ற மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்களை நாம் மதிப்பீடு செய்வதுண்டு, அப்படி நம்மை நாம் எத்தனை முறை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்? உண்மையில் நம்மை நாம் மதிப்பீடு செய்ய அஞ்சுகிறோம், நான்' என்கிற எண்ணம் நம்மதுக்குள் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதால் நாம் பல வேளைகளில் மற்றவர்களுக்கு தடையாய் இருக்கிறோம், இதன் காரணமாய் நம்மை நாம் மதிப்பீடு செய்ய மறுதலிக்கிறோம், நாம் செய்யும் தவறை நமக்கு நாமே சுட்டிக்காட்டிக்கொள்ள மறுக்கிறோம்.' நான்' என்கிற உணர்வு அதிகமாக உருவகம் எடுக்கும் பொழுது அது ஒரு போதையாகி போகின்றது நாமும் அந்த போதைக்கு அடிமையாகி விடுகின்றோம். நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்ளும் வேலைய்களில் இந்த போதையின் அளவை நாம் குறைத்துக்கொள முடியும், நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற எண்ணமும் அளவைக்குள் அடங்கி ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.

- என்றாவது ஒரு நாள் மற்ற மனிதனின் கண்ணீருக்கு நான் காரணமாக இருந்து இருகிறேனா?
- நான் முன்னேற ஏதேனும் மனிதனுக்கு தடையை ஏற்ப்படுத்தி இருகிறேனா?

இதுபோன்ற கேள்விகளை நமக்குள் நாம் நிதம் கேட்டு கொண்டு நம்மை நாம் மதிபிட்டுக்கொள்ளும் வேளைகளில் நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற உணர்வு கட்டுக்குள் இருக்கும், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வும் மற்றவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

எனவே நம் தனிமை பொழுதுகளில் நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்வோம், மற்ற மனிதருக்கு நாம் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

மனிதனைத்தேடி (முதல் பதிவு) "நான் என்ற சொல்லின் பிறப்பு"


'நான்' - இந்த சொல் மனித வாழ்க்கையில் அழிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டது, இந்த 'நான்' என்ற சொல் எதை குறிக்கிறது என்ற தேடலில் உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை மனித இனம் குலம்பிக்கொண்டிருகிறது. மடிந்து போவதற்காக எந்த மனிதனும் பிறப்பதில்லை ஆனால் மரணம் வராத மனிதன் இது வரை உலகத்தில் பிறந்ததில்லை இனிமேலும் அப்படி ஒரு மனிதன் பிறக்க போவதில்லை, பின்எதற்க்காக இந்த மனித வாழ்க்கை? எதற்க்காக இந்த 'நான்' என்ற தேடல்கள்? எதற்க்காக உறவுகள்? இந்த கேள்விக்கான ஒரு சிறு அலசல் தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

உலகத்தில் உயிரினங்கள் வாழத்தொடங்கிய காலத்தில் நிச்சயம் மனிதனும் ஒரு மிருகமாகத் தான் இருந்திருப்பான், ஆனால் அவனது இந்த 'நான்' என்ற தேடல் அவனை மற்ற உயிரினங்களில் இருந்து மாறுபடுத்தி அவனை நாகரீகமாக்கியது. ஆம், ஒவ்வொரு மனிதனுக்குளும் இருக்கும் இந்த 'நான்' என்ற எண்ணம் தான் மனித இனத்தை பன்படுத்தியது. உறுப்புகளின் அமைப்புகளிலும், உடற்க்கூருகளின் அமைப்பாலும் மனிதர்கள் நாம் ஒரே போல இருக்கிறோம் அதாவது ஐம்புலன்களும், கைகால்களும், உடலுக்குள் இருக்கும் உறுப்புகளும் அனைத்து மாந்தருக்கும் ஒரே போல தான் இருக்கின்றது அனால் இந்த உடல் உருபுகளின் சிறு சிறு மாற்றங்கள், அளவைகளில் மாற்றங்கள் காரணமாக ஒரு ஒரு மனிதருக்குள்ளும் வேறுபட்டு இருக்கிறோம், குப்பன் சுப்பனை போல இருப்பதில்லை, கந்தன் வேலணை போல இருப்பதில்லை இந்த வேறுபாடு தான் 'நான்' என்ற சொல் பிறக்க முதல் கரணம். ஒரு ஒரு மிருகமும் பிரிக்க பட்டு இருப்பது அதன் உடற்க்கூருகளின் அடிப்படையில் தான் அதே போல மனித இனமும் தனக்குள் தானே பிரிந்து இருக்கிறது இந்த பிரிவு மனிதனின் ஆழ் மனதுக்குள் ஏற்படுத்தும் ஒரு உணர்வு தான் 'நான்' என்கிற உணர்வு.

பிறக்கும் பிள்ளையோடு ஒட்டிக்கொண்டு பிறக்கிறது இந்த 'நான்' என்கிற உணர்வு, வளரும் வேளையில் நான் மற்றவர்களை விட வலுவானவன் என்பதை உணர்த்த நிதமும் வெளிப்படுகின்றது இந்த 'நான்' என்கிற உணர்வு, வளந்து விட்ட வயதில் 'நான்' அனுபவத்தில் சிறந்தவன் என்று உணர்த்த வருகிறது இந்த 'நான்' என்கிற உணர்வு, மடியும் வேலையில் நான் வாழ்கையை முடித்து விட்டேன் இன் வரும் காலம் என்னை பேசட்டும் என வருகிறது 'நான்' என்கிற உணர்வு. இப்படி வாழ்க்கையோடு ஒட்டி போய்விட்ட இந்த 'நான்' என்கிற உணர்வை பற்றிய நீண்ட நெடும் அலசல்கள் தான் இனி வரும் பதிவுகளில் தொடர இருக்கின்றது. 'நான்' என்கிற உணர்வு எப்படி மனிதனுக்குள் பிறக்கின்றது என்பதை சற்றே உணர்ந்திருப்போம் இனி வரும் பதிவுகள் மூலம் 'நான்' என்கிற இந்த உணர்வு மனிதனுக்குள் நடத்தும் மாற்றங்களையும், போராட்டங்களையும் பற்றிபேசுவோம்.

மனிதனைத்தேடி


புதிய ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி, 'மனிதனைத்தேடி' இது இந்த பதிவின் தலைப்பு மட்டும் அல்ல பொருளடக்கமும் கூட. பிறக்கும் மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் பல கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தது அந்த கேள்விகளுக்கு எனக்குள் நான் எழுதிக்கொண்ட பதில்கள் தான் இந்த 'மனிதனைத்தேடி' என்கிற பதிவு.

இந்த பதிவை பல பகுதிகளாக கிறுக்குகிறேன்...எனக்குள் எழுந்த கேள்விகள் உங்களுக்குளும் எழலாம், அப்படி உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள் வரும் வேலையில் இந்த பதிவின் சில பகுதிகள் நிச்சயம் உங்களுக்கு உகந்தவையாக இருக்கும் என நம்புகிறேன்.
தொடர்ந்து வரும் பகுதிகளை படியுங்கள் என்னுடன் சேர்ந்து வாழ்கையின் தேடலில் கலந்துகொள்ளுங்கள்.

இவன்
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்

குறுங்கதைகள்


நண்பன்...
வேகமாக ஓடிச்சென்று கூடி இருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேசென்றேன், அங்கே அடிபட்டு இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த என் நண்பன்கையில் உயிரோடு ஓடிக்கொண்டிருந்த என் கை கடிகாரத்தை கண்டு நிம்மதிபெருமூச்சுவிட்டேன்....


சுப்பு தாத்தா...

வரப்பின் ஓரத்தில் நடந்துகொண்டிருந்த சுப்பு தாத்தாவின் வலது காலில் சேர் அப்பிக்கொண்டது, அந்த சேற்றை எடுக்க சுப்பு தாத்தா தன் இடது காலால் வலது காலை துடைத்தார், இப்பொழுது வலது காலின் சேர் இடது காலில் அப்பிக்கொண்டது, பின் இடது கால் சேற்றை அகற்ற வலது காலால் துடைத்தார் பின் இடத்தும் வலதுமாக தொடர்ந்தார்...


புல் மேயும் ஆடு...

இன்று அந்த ஆட்டிற்கு கிடைத்த புல்லின் ருசி போல என்றுமே கிடைத்ததில்லை, எனவே ருசியில் மயங்கி புல்லை மேய்ந்தது அந்த ஆடு, அருகில் நின்றுகொண்டிருந்த நரியை கவனியாமல்.

பள்ளிக்கு போகணும்..
.

பள்ளியின்
அருகே அறிவொளி இயக்கத்தின் விளம்பர பலகையை எழுதிக்கொண்டிருந்தான் அந்த ஆறுவயது சிறுவன்...