ஒரு கடிதம்…


அன்புள்ள எனக்கு,

உன் நலம் விரும்பும் நான் எழுதும் மடல்….

நீயும் நானும் ஒருவர்த்தான்- என்பதால்

நலம் விசாரிக்க தேவையில்லை….

நான்தான் நீ- என்பதால்

நிகழ்வுகளை பட்டியளிட தேவையில்லை….

இருவரும் ஒருவர் தான் - என்பதால்

எண்ணங்களின் பகிர்விர்க்கும் அவசியமில்லை

வித்தியாசங்கள் இலாததால் - இறைவனிடம்

வேண்டிக்கொள்ளச்சொல்லவும் அவசியமில்லை

பின் எதற்கு இந்த கடிதம்???
உலகத்தின் ஓட்டத்தில் உன்னை நீ மறந்துவிட்டாய் என்ப்தை உணர்த்துவதர்க்குத்தான்.

இப்படிக்கு உன்னோடு,

நான் (எ) நீ.

4 comments: