நிரந்தரம்...
உன் வாழ்க்கை உன் கையில்...
'உன் வாழ்க்கை உன் கையில்' இதைத்தான் இந்த பதிவில் நான் பதிவு செய்கிறேன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
பட்டாம்ப்பூச்சியை போன்ற அழகான வாழ்க்கையை இறைவன் நம் கையில் கொடுத்துவிட்டான் அதை நாம் என்ன செய்ய போகின்றூம்???
பெண்மை...

women is made of man’s rib…not from his feet to be walked on.. not from his head to be superior over…. but from his side to be his equal… from under his arm to be protcted….And next to his heart to be always loved…. that’s the status of woman…. - being a man how do we justify this quote???
தாயாக, உடன்பிறப்பாக, தோழியாக, மனைவியாக, குழந்தையாக நம்மோடு நம்மை போல் வாழும் பெண்ணையும் சக உயிரினமாக மதிக்க கற்றுக்கொள்வோம். பெண்மையை போற்றுவோம், மனிதராய் வாழுவோம்.
முயற்ச்சிப்பேன்…
யார் மனிதன் (அன்றும் இன்றும்)….

கற்களை கூர்மையாக்கினான்,
அன்றைய மனிதன்மிருகங்களை கொள்வதற்கு.
பின் கத்தியை தீட்டினான்
அன்றைய மனிதன் மிருகத்தின் சதையை கிழிப்பதற்கு,
நெருப்பையும் கண்டுகொண்டான்
அன்றைய மனிதன்மிரகச்தை சமைப்பதற்க்கு,
அன்றைய மனிதன்அவன் பெயர் காட்டுமிராண்டி…
கற்களை தேடினோம்,
இன்றைய மனிதர்கள் நாம்
அடுத்தவன் மேல் எரிவதற்க்கு.
பின் கத்தியை தீட்டுகிறோம்
நாம் இன்றைய மனிதர்கள்
அடுத்தவன் உயிர் பறிப்பதற்கு
இன்றைய மனிதர்கள் நாம்,
நெருப்பையும் கையெடுத்தோம்,
பிறர் உடைமை எரிப்பதற்கு.
இன்றைய மனிதர்கள்நம் பெயர் நாகரிக மனிதர்கள்….
இது என்ன கொடுமை சார்????
மனுஷ இனம் மாறாது சாதி சண்டையும் தீராது….

புள்ள ஒன்னு பிறந்தாக்க- அதுக்கு
பேரு ஒன்னு வெச்சாக்க
அப்பன் பேர சேத்துவை- செத்த
சாதி பேர ஏன் சேத்த?
பள்ளிக்கூடம் போகும்போதும்
படிவம் வாங்கி எழுதும் போதும்
சாதி பேர கேட்டு
நீங்க சாதிசுட்டீங்களோ?
வேலை ஒன்னு போகும் போதும்
கல்யாணம் கட்டும் போதும்
சாதி பேர சொல்லிக்கிட்டு
சேந்ததேன்னவோ?
பிறக்கும் போதும் சாதி
படிச்ச போதும் சாதி
வாழ்ந்த போதும் சாதி
வாழ்க்கையோடு சேந்து போன
சாக்கடை சாதி எனக்கு செஞ்சது என்னவோ?
மேல் சாதி வீட்டு நாயும்
கீழ் சாதி மனுஷன பாத்தாகொலைக்க மாட்டேங்குது…
அவன தீண்ட கிட்ட நெருங்க மாட்டேங்குது…
மேல கீழ பிரிச்சு பாத்து
மனுஷ பய மயங்கி
நேத்துபோட்டுகிட்ட சண்டையிலே
சாதி ஜெய்ச்சுச்சு…
மனுஷன் மட்டும் செத்துட்டான்…
சாதி சண்ட போட்டுக்கிட்டு
செத்து போன பய புள்ளைய
பொதைக்க போன காட்டிலும்…..
(செத்த பின்னுமா சாதி?)
சின்ன சின்னதாய்…
அன்பினறம்…
ஒரு கடிதம்…

உன் நலம் விரும்பும் நான் எழுதும் மடல்….
நீயும் நானும் ஒருவர்த்தான்- என்பதால்
நலம் விசாரிக்க தேவையில்லை….
நான்தான் நீ- என்பதால்
நிகழ்வுகளை பட்டியளிட தேவையில்லை….
இருவரும் ஒருவர் தான் - என்பதால்
எண்ணங்களின் பகிர்விர்க்கும் அவசியமில்லை
வித்தியாசங்கள் இலாததால் - இறைவனிடம்
வேண்டிக்கொள்ளச்சொல்லவும் அவசியமில்லை
பின் எதற்கு இந்த கடிதம்???
உலகத்தின் ஓட்டத்தில் உன்னை நீ மறந்துவிட்டாய் என்ப்தை உணர்த்துவதர்க்குத்தான்.
இப்படிக்கு உன்னோடு,
நான் (எ) நீ.