இந்தியக்காற்று இங்கிலாந்தில் வீச யாரை கேட்கிறது அனுமதி
கால்கள் கொண்டேன் எல்லைகளும் கொண்டேன்...
பசபிக் பெருங்கடலின் துளி இந்தியப்பெருங்கடலில் கலக்க கேட்பதில்லை அனுமதி
அரறறிவு கொண்டேன் என் உரிமைகள் இழக்க...
தமிழ்ப் புறாவும் மராத்திப் புறாவும் பேசிக்கொள மொழிபெதம் இல்லை
கல்வியும் கொண்டேன் சுருங்கிய அறிவோடே...
அர்டிக்கின் டால்பின் அட்லாண்டிக்கில் ஆட பாஸ்போர்ட் தேவை இல்லை
மனிதனானே எல்லைக்குள் அடங்கிப் போனேன்...
இயற்க்கை என்றும பேதம் கொண்டதில்லை அவை எந்த எல்லைக்குள்ளும் அடங்கியது
இல்லை, மனிதர்கள் நாமும் இயற்கையின் அங்கம் தான் அனால் சிந்தித்து
பாருங்கள் நண்பர்களை மேற்கூறிய எந்த ஒரு கருத்திலாவது மனிதன் என்பவன்
இயற்கையின் மற்ற அங்கங்களை போல சுதந்திரத்தை அனுபவிக்காதவன். உண்மையில்
மனிதனுக்கு இயற்கையை அடக்கி ஆளத்தான் ஆசையே தவிர இயற்கையை அனுபவித்து வாழ
ஆசைப்படுபவன் இல்லை.
இயற்கையாய் வாழ எல்லைகளை தகர்ப்போம்...அன்பு கொள்வோம் அதுவே இயற்கையின் வலி...எல்லைகள் மறந்தால் தொல்லைகள் இல்லை...
பசித்த பின் உண்பவனுக்கு பஞ்சம் மட்டும் மிச்சம் - இங்கே
பணமிகு மனிதர்க்கு நோய் நொடியே மிச்சம்
உழுதவனுக்கு ஏர் மிச்சம்
நெய்தவனுக்கோ தறி மிச்சம்
கொடுதவனுக்கோ தேய்ந்த செருப்பு மிச்சம்
வாங்கியவனுக்கு கடன்கார பட்டம் மிச்சம்
செத்தவனுக்கு உடல் மிச்சம்
நடப்பவனுக்கு நாளைய நாள் மிச்சம்
காத்திருத்தல் காதலனுக்கு மிச்சம்
காத்திருந்தால் காதல் என்றுமே மிச்சம்
கல்யாணம் ஏழை பெண்ணுக்கு மிச்சம்
குழந்தையோ மலடிக்கு மிச்சம்
முதுமையில் தனிமை மிச்சம்
இளமையில் கல்வியே மிச்சம்
முத்தங்கள் காதலின் மிச்சம்
சப்தங்கள் மௌனத்தின் மிச்சம்
உலகமே கதிரவன் மிச்சம்
படைத்தவன் தூவிய எச்சம்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்!!!
மனிதன் என்கிற மிருகத்தை தவிர மற்ற எல்லா மிருகங்களுக்கும் பெரும்பாலும் வால் இருக்கிறது. நன்றியை தெரிவிக்க நாய் தன் வாலை ஆட்டுவதும், ஈக்களை விரட்ட மாடுகள் தன் வாலை அசைப்பதும் தவிர வாலுகென்று ஒரு முக்கிய பனி எதுவும் இல்லை, பின் எதற்காக இந்த உபயோகமட்ட்ற ஒரு உறுப்பை இந்த மிருகங்கள் தாங்கி இருக்கின்றன என்ன யோசிக்கவெய்த்து என்னை பல நேரங்களில் வால் தொந்தரவு செய்திருக்கின்றது. பல வேளைகளில் நாய்கள் தன் வலை அசைத்து என்னை பரிகசிப்பது போல தோன்றுவதும் உண்டு.
உங்களில் பலர் என்னை போலவே பல வேளைகளில் வில் போல வளைந்த நாயின் வாலை நேர் செய்ய முயற்சித்து இருப்பீர்கள் இன்னும் பலர் மலை அளவு முயன்றும் நிமிர்த்த முடியாது அந்த நாய் வாலை கையால் நசுக்கி நாய் கடி வங்கி இருப்பீர்கள் அந்த அளவுக்கு இந்த நாயின் வால் நம்மை பல வேளைகளில் பாதித்து இருக்கிறது. ஒரு வகை உயர் ஜாதி (மனிதன் வகை படுத்தியதால் நாய்களிலும் கூட ஜாதிகள் பிரித்து விட்டோம்) நாய்களுக்கு வால் வெட்டபட்டால் தான் அதன் மதிப்பு கூடுமாம் என நான் கொடுத்த அறிவுரையை ஏற்று அந்த வகை நாய் ஒன்றை வால் வெட்டுவதற்காக என் நண்பர் தன் நாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தன் வால் வெட்டுப்பட போவதை அறியாத அந்த பரிதாப ஜீவன் தன் வாலை அசைத்தபடியே மருத்துவமனைக்கு சென்றது. மருத்துவர் அந்த வாலை வெட்டி எடுத்த பிறகு நான்கு ஐந்து நாட்கள் அந்த நாய் வெறி பிடித்தது போல சுற்றி வந்தது, மேலும் அது தன் வால் தானாக மறைத்து கொள்கிறதோ என்று எண்ணி தன் பட்டத்தை திருப்பி திருப்பி பார்த்தது எனக்கு பரிதாபமாக தோன்றியது. சில களம் இப்படி தேடி பார்த்து கிடைக்காமல் போனதால் அது தன் வாலை மெல்ல மெல்ல மறந்து போனது, எப்பொழுதாவது பொழுதுய்கள் வால் அசைப்பதை கண்டுவிட்டால் அது வால் இல்லாத தான் பின்புறத்தை மட்டும் ஆடிக்கொள்வது உண்டு. இதை பார்த்த பொழுது அந்த நாயின் மீது எனக்கு ஒரு பரிதாப உணர்ச்சி தோன்றியது ஈதோ அந்த நாயின் இயல்புத்தன்மையை வெட்டி எடுத்துவிட்டது போன்ற குற்றுனர்சியும் எனக்கு உண்டானது. மறுமுறை இந்த உணர்வோடு அந்த நாயை பார்த்தபொழுது நாயின் புட்டத்தில் வெட்டி எறிந்த வால் ஆடுவதைப்போன்ற பிரமையும் தோன்றியது. பல வேளைகளில் மைதனுக்கும் ஒரு காலத்தில் வால் இருந்து அது ஏதோ ஒரு காரணத்தால் வெட்டப்பட்டு இருக்குமோ என கூட தோன்றியது உண்டு. நம் பின் புறத்தில் முதுகுத்தண்டின் இறுதியில் வால் வெட்ட பட்டது போன்ற ஒரு அமைப்பு இருப்பது போன்றும் எனக்கு தோன்றி இருக்கிறது இதன் காரணமாக நானும் கண்ணாடியில் வால் இருந்த தடம் தெரிகிறதா ன்ன பார்த்தது உண்டு.
இந்த வெட்ட பட்ட வாலை போலதான் நாம் பல வேளைகளில் நமக்கு தேவை அற்றது என எண்ணி நமது பல இயல்புகளை பல வேளைகளில் வெட்டி எரிந்து விடுகின்றோம். மற்றவர்கள் நம்மை தவறாக நினைப்பார்கள் என்றும், ஊருக்கு நல்லவன் நான் என்றும் சொல்லிக்கொள்ள பல வேளைகளில் நாம் நமது இயல்பை வெட்டி எரிந்து விடுகின்றோம் உண்மையில் நமது வால் நமக்கு பொருத்தமானதுதான். நமது வாலை நாம் காப்பாற்றிக்கொண்டால் நை வாலை பாத்து பொறாமைப்பட தேவை இல்லை.
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்வது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்

ஒரு ஒரு மனித மனமும் ஒரு பெரும் புதையல், இந்த புதையலை அகழ்வாராய்ந்து பார்க்க என்னோடு இந்த பயணத்தில் பயணிக்க உங்களை வரவேற்க்கிறேன், உங்களது மனதை நீங்களே அகழ்வாராய்ந்து உங்களது மனதின் புதையலை புரட்டிப்பார்க்க வாருங்கள் வாழ்க்கையில் பயணிப்போம். புதையல் என்பது பொதுவாக கண்களில் தென்படாது எங்கையோ மறைக்கப்பட்டிருக்கும் அதை போலத்தான் மனித மனமும் மறைக்கப்பட்டே இருக்கின்றது. பெருவாரியான நாட்களில் நாம் மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது நாம மறந்து விடும் ஒரு செயலைத்தான் இங்கு அலச இருக்கின்றோம்.
கண்முன்னே தெரியும் ஒரு பிம்பம் என்றும் கானல் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகின்றோம். காட்சிப் பிழைகளை கொண்டு மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது அது நம் மனதிற்கு தோன்றும் கானல் என்பதை மறந்து போகின்றோம். "தன் விழிகளை மூடிய பூனை உலகம் இருண்டது என்றதாம்" இதை போலத்தான் இன்று நாமும் இருக்கிறோம், அதாவது நம் பார்வைக்கு எது தெரிகின்றதோ அதை மட்டுமே அலசும் சதர்ணனாக நாம் செயல் படுகின்றோம். நம் முன்னே நிற்கும் ஒரு மனிதன் நமக்கு அவனது மனதின் முழுமையை காண்பிக்கும் முன்னமே அவனை மதிப்பீடு செய்ய நாம் முயல்கிறோம், இது முற்றும் தவறான ஒரு செயல். நமக்கு முன்னே நிற்கும் மைதான் பெரும் பாலும் அவனது நிஜத்தை மறைத்து நம்மை கவரும் செயலில் தான் முதன்மை செலுத்துகிறான் இதை மறந்து அவன் நல்லவன் எனும் முடிவுக்கு நாம் முந்துகிறோம்... பல வேளைகளில் தன சூல்நிளைகரனமாக சிலர் கோவம் கொள்ளும் வேலையில் அவனை தீயவன் என நாம் மதிபிடுகின்றோம் இதுவும் சேரி முன்னது போல நல்லவன் என மதிப்பிடுவதும் தவரே....
ஒரு மனிதன் தன முழுமையை காண்பிக்கும் முன்பு அவனை மதிப்பீடு செய்தல் என்பது பூனையின் செயலுக்கு ஒத்ததே...நமது செயல் நமக்கு என்றுமே தவறானதாக தோன்ற வேண்டும், அந்த தவறை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் பின்னரே நாம் மற்றவரை மதிப்பீடு செய்தல் வேண்டும். "Judging a man is just judging what he has chosen to show you " மனிதர்களை மதிப்பீடு செய்ய அவசியம் இல்லாத உலகம் இது எனவே யாரையும் அறிந்து கொள்ள எத்தனிக்கும்முன் நம்மை நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் நாம் மற்றவரை மதிப்பீடு செய்ய முயற்சிக்க வேடியது இருக்காது.
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்