
ஒரு ஒரு மனித மனமும் ஒரு பெரும் புதையல், இந்த புதையலை அகழ்வாராய்ந்து பார்க்க என்னோடு இந்த பயணத்தில் பயணிக்க உங்களை வரவேற்க்கிறேன், உங்களது மனதை நீங்களே அகழ்வாராய்ந்து உங்களது மனதின் புதையலை புரட்டிப்பார்க்க வாருங்கள் வாழ்க்கையில் பயணிப்போம். புதையல் என்பது பொதுவாக கண்களில் தென்படாது எங்கையோ மறைக்கப்பட்டிருக்கும் அதை போலத்தான் மனித மனமும் மறைக்கப்பட்டே இருக்கின்றது. பெருவாரியான நாட்களில் நாம் மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது நாம மறந்து விடும் ஒரு செயலைத்தான் இங்கு அலச இருக்கின்றோம்.
கண்முன்னே தெரியும் ஒரு பிம்பம் என்றும் கானல் என்பதை நாம் பல வேளைகளில் மறந்து விடுகின்றோம். காட்சிப் பிழைகளை கொண்டு மற்ற மனிதர்களை மதிப்பீடு செய்யும் பொழுது அது நம் மனதிற்கு தோன்றும் கானல் என்பதை மறந்து போகின்றோம். "தன் விழிகளை மூடிய பூனை உலகம் இருண்டது என்றதாம்" இதை போலத்தான் இன்று நாமும் இருக்கிறோம், அதாவது நம் பார்வைக்கு எது தெரிகின்றதோ அதை மட்டுமே அலசும் சதர்ணனாக நாம் செயல் படுகின்றோம். நம் முன்னே நிற்கும் ஒரு மனிதன் நமக்கு அவனது மனதின் முழுமையை காண்பிக்கும் முன்னமே அவனை மதிப்பீடு செய்ய நாம் முயல்கிறோம், இது முற்றும் தவறான ஒரு செயல். நமக்கு முன்னே நிற்கும் மைதான் பெரும் பாலும் அவனது நிஜத்தை மறைத்து நம்மை கவரும் செயலில் தான் முதன்மை செலுத்துகிறான் இதை மறந்து அவன் நல்லவன் எனும் முடிவுக்கு நாம் முந்துகிறோம்... பல வேளைகளில் தன சூல்நிளைகரனமாக சிலர் கோவம் கொள்ளும் வேலையில் அவனை தீயவன் என நாம் மதிபிடுகின்றோம் இதுவும் சேரி முன்னது போல நல்லவன் என மதிப்பிடுவதும் தவரே....
ஒரு மனிதன் தன முழுமையை காண்பிக்கும் முன்பு அவனை மதிப்பீடு செய்தல் என்பது பூனையின் செயலுக்கு ஒத்ததே...நமது செயல் நமக்கு என்றுமே தவறானதாக தோன்ற வேண்டும், அந்த தவறை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் பின்னரே நாம் மற்றவரை மதிப்பீடு செய்தல் வேண்டும். "Judging a man is just judging what he has chosen to show you " மனிதர்களை மதிப்பீடு செய்ய அவசியம் இல்லாத உலகம் இது எனவே யாரையும் அறிந்து கொள்ள எத்தனிக்கும்முன் நம்மை நாம் அறிந்து கொண்டால் நிச்சயம் நாம் மற்றவரை மதிப்பீடு செய்ய முயற்சிக்க வேடியது இருக்காது.
மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்
No comments:
Post a Comment