யார் இங்கே துறவி?



முற்றும் துறந்த முனிவர்கள் இன்று முழுதும் திறந்து காண்பிக்கும் கட்சிகள் கணினி வழியே நிரம்ப துவங்கி விட்டது. காவிக்குள் ஒளிந்து கொண்டு காம பசி தீர்துக்கொண்டும் வாழும் துறவிகள் இன்று அதிகம் பெருகி விட்டனர், இதற்க்கு காரணம் கேட்டால் ஏமாறும் மனிதர்கள் என்று துறவிகளும், ஏமாற்றும் துறவிகள் என்று சாமான்னியனும் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் இங்கே துறவி என்னும் ஒரு சொல்லுகே இடம் இல்லை காரணம் துறவிகள் உடலின் சாதாரண தேவையான உணவையும் கூட துச்சமாக மதிப்பவர்கள், அனால் இன்றைய காவி உடை மனிதர்களோ கார், பங்களா, பகட்டான உணவு, அழகான சிஷ்யைகள் என சுகபோக வாழ்கை வாழும் மாடர்ன் ஆசாமிகள்.

ஒரு மனிதன் தன் மனித வாழ்வில் பற்று இழக்கும் பொழுது ஏதோ ஒரு சில பதில் தெரியாத தேடலில் இறங்குகிறான் அந்த தேடல் அவனை பெரும்பாலும் கொண்டு சேர்க்கும் இடம் தனிமை. இந்த தற்காலிக தனிமையை பெரும்பாலனோர் ஏதோ ஆன்மிக தளமாக என்னிகொள்ளும் விபரீதம் தான் இந்த துறவிகள் எனும் கபட நாடகத்தின் மூல காரணம். மேலும் இன்றைய மனிதர்கள் மிகவும் விளம்பரதாரிகள் புரியாத வார்த்தைகளாலும் பல அழகான பேச்சுகளாலும் மக்களை கவர்வது மிகவும் எளிதாகி விட்டது இப்படி பேச்சு திறனில் பளிச்சிடுபவர்கள் புகழ் பெற நினைக்கும் பொழுது அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த காவி உடை. இப்படி காவி தரிக்கும் தற்காலிக துறவிகள் செய்யும் தவறுகள் அவர் சார்ந்த சமயத்தின் மீதும் களங்கத்தை சுமத்துகிறார்கள். காவியும் வெண்மையும் தூய்மையின் நிறங்கள் அதனாலையே தான் துறவிகள் அந்த நிறத்தை ஆடையென தரிக்கிறார்கள், இந்த ஆடையை தரித்துக்கொண்டு தான் இன்று துறவிகள் பலபொல்லாத காரியங்கள் செய்து வருகிறார்கள்.

புலனடக்கமும் மன அடக்கமும் துறவிகளின் முக்கிய அறமாகும் இதை எளிதில் மறந்து விடும் இன்றைய துறவிகள் 'எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மற்றவர்கள் நுழைந்து பார்க்க அவசியம் இல்லை' என்கிறார்கள். செய்வதை செய்துவிட்டு இவர்கள் கொட்டும் சப்பைகட்டுகளுக்கு மனிதர்கள் பலரும் மண்டை அசைப்பது அதனினும் கொடுமை. உண்மை துறவிகள் தன்னலம் மறந்தவர்கள், அவர்களுக்கு அவர்களுடைய இச்சைகள் கண்முன்னே நிற்ப்பதில்லை, அவர்களின் உறக்கத்திலும் கூட உறுப்புகள் அவர்களை உறுத்தாது. ஆனால் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் பொழுது தேனொழுக பேசும் துறவிகளை கண்டால் கால ஆண்டு தொலைவு ஓடும் அளவிற்கு பயமாக இருக்கிறது. உண்மையில் இவர்களின் துறவறத்தில் அடிப்படை தவறு இருக்கிறது. எந்த ஒரு விஷயம் ஒரு மனிதனுக்கு மறைத்து வைக்கப்படுகின்றதோ அதை ஆராய்ந்து பார்க்கும் 'EXPLORING MIND' மனிதனின் இயல்பான விஷயம். காமம் என்பது இந்த துறவிகளுக்கு திகட்டாத அளவிலும் தேடி சுவைக்கதூன்டாத அளவிலும் கற்றுகொடுக்க பட வேண்டும். சுவைகளை சுவைத்து பார்த்தால் தான் அதன் அம்சங்களை சொல்ல முடியும் அதனால் காமத்தின் அளவுகோலை இந்த துறவிகளுக்கு அளவாக அறிய செய்ய வேண்டும் பின் அதை தவிர்பதின் காரணத்தை அழுத்தமாக புரிய வைக்க வேண்டும். வேதங்களை மட்டும் படிக்கும் துறவிகள் வேதத்திலும் அதைவிளக்கும் வேதாந்தத்திலும் சிறந்து விளங்கியும் சுயக்கட்டுபாட்டை இழக்க நேருவதால் துரவுத்தன்மையை இழக்க நேரிடுகின்றது எனவே காமத்தின் மீது இருக்கும் தாகத்தை தீர்க்க இவர்களின் புலனடக்கத்தின் மேன்மையை கற்று கொடுக்க ஆதீனங்களும் துறவு மடங்களும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். யார் எந்த மொழி கூறினாலும் அதை அப்படிஏய் ஏற்றுக்கொள்ளாமல் நமது சுய அறிவிற்குள் கொஞ்சம் செலுத்தி ஆராய்ந்து எடுத்துக்கொள்ள சாமான்யர்கள் நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். துறவிகளை குற்றம் சொல்ல தேவை இல்லை காரணம் நம்மை பக்குவ படுத்திக்கொள தேவையான திறன்கள்அனைத்தும் தனி மனிதனிடமும் கொட்டிகிடக்கின்றது அதை தேடி பிடிப்போம் நமக்கு தேவையான அகசிந்தனைகளை நமக்குள் இருந்தே நாம் பெற்றெடுப்போம்

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கமிலஸ்.

என் அன்னைக்கு...



என் உயிருக்கு உரியவள் நீயம்மா
என் உயிரும் கூட நீயே அம்மா

ஈரைந்து மாதங்கள் உனக்குள் வைத்தாய் - எனை
ஈன்ற பின்பும் உன் கண்ணுக்குள் வைத்தாய்

எனக்காக நீ துஞ்சாத இரவுகள் கொண்டு
ஒரு நூற்றாண்டு செய்திடுவான் கடவுள் இன்று.

மழலை மொழி மறந்து நான் செப்பிய முதல் சொல் நீ
அழுகை சுமை மறக்க என்றும் நான் சொல்லும் சொல் நீ

உலகின் அழகிகள் உன் போல் இல்லை - என் தாயே
நீயன்றி எனக்கு இவுலகமே இல்லை

என் பிஞ்சு பாதங்கள் உனை மிதித்த வேளையிலும்
என் நஞ்சு மொழிகள உன்னை சுட்ட பொழுதிலும்
எனக்காக எனைக்காக்க எல்லாம் செய்தவள் நீயம்மா

மழலை காலத்தில் உன் தோளில் சாய்ந்தேன்
நான் மடியும் வேலையும் அதைத்தர இறைவனிடம் கேட்பேன்

எதை நான் செய்தேன் உனை தாயாக பெறுவதற்கு
எதை நான் செய்வேன் மறுபிறப்பில் உன் மகனாக பிறப்பதற்கு...

பாரதத் திருதேசமே....


நற்வேதம் நாற்க் கொண்டு
இன்ன பிற நூற்க்கொண்டு
நுண்ணறிவு வளர்த்ததெம்
பாரதத் திருத்தேசமே

பொங்கும் பல நதியுண்டு
எங்கும்நிறை அன்புண்டு
பச்சை நிற மேனிக்குள் எம்
பாரதத் திருத்தேசமே

ஆழிப் பெருங்கடல் முப்புறம் காக்க
ஆயப் பெருமலை மறுபுறம் நிற்க
தூய நெறி பல தன்னுள் கொண்டதெம்
பாரதத் திருத்தேசமே

தோல் நிறம் தொன் மொழி பேதங்கள் கொண்டிருந்தும்
அந்தணர் அரிசனர் வேற்றுமை தானிருந்தும்
பூந்தளிர் கேளீராய் மானிடர் வழ்வதெம்
பாரதத் திருத்தேசமே

அறவழி நெறிகொண்டு விடுதலை கொண்டதும்
வீரத்தின் வழிநின்று அறநெறிக் காப்பதும்
உயர்திணை மண்கொண்ட எம்
பாரதத் திருத்தேசமே

இமையத்தின் குளிரிலும் கடும்பாலையின் தகிப்பிலும்
இன்னுயிர் தந்து எம் நுண்ணுயிர் காக்கும்
வீரத்தின் புதல்வர்கள் ஈன்றதெம்
பாரதத் திருத்தேசமே

கணிப்பொறி காலத்தில் அறிவியற் ஞாலத்தில்
விண்தொட்ட விண்கலம் படைத்ததும்
நுன்னுன்னி உயிருக்குள் ஆய்வுகள் ஆண்டதுவும் எம்
பாரதத் திருத்தேசமே

இனி ஒருதேசம் என் தேசம் போல் வருமோ?
உள்செல்லும் சுவாசம் என் இந்தியக்காற்றைப் போல் தருமோ?
வாழிய என் தேசம் வளரட்டும் அதன் மீது நம் நேசம்...

மனிதனைத்தேடி (இரண்டாம் பதிவு) 'நான் என்ற உணர்வு ஒரு பாடம்'


பெரும்பாலான நேரங்களில் நாம் சுயநலவாதிகளாக இருப்பதற்கு கரணம் இந்த ' நான்' என்கிற உணர்வு, ஆனால் பல வேளைகளில் ஒரு மனிதனின் தன்னம்பிக்கையின் அளவுகோலாகவும் இந்த 'நான்' என்கிற உணர்வு செயல் படுகின்றது. கருத்து பரிமாற்றங்களின் பொது பலரும் தங்களது கருத்துக்களை முன்னிறுத்தி பேசுவதையும் அக்கருத்துக்களை மற்றவர்கள் மறுத்து பேசுவதையும் நாம் கவனித்திருக்கக்கூடும், இப்படி மனிதர்கள் தங்களது கருத்துக்களை வெளி படுத்தும் வேளையில் 'நான்' என்கிற உணர்வு அதிகம் வெளிப்படும் ஆனால் இந்த சூழ்நிலையில் வெளிப்படும் 'நான்' என்கிற உணர்வு ஆக்கப்பூர்வமானதாகவே இருக்கும், காரணம் இங்கே நிகழும் கர்ருத்துப்பரிமற்றத்தல் வரும் பயன் நன்மையாக இருக்கிறது, இன்றைய பல அறிவியல் மற்றும் ஆண்நிமிக கோட்பாடுகள் இப்படிப்பட்ட கருதுப்பரிமற்றன்களால் நிகழ்ந்ததவைகள் தான்.

ஒரு மரம் வளர நாம் அதன் வேறிற்கு நீர் இறைகின்றோம், ஆனால் அந்த நீரை வேறிடம் இருந்து மற்ற பாகங்கள் உள்வங்கிக்கொல்வதன் விளைவு தான் ஒரு மரத்தின் முழு வளர்ச்சி.அதாவது வேர் வழியே செல்லும் நீரை இலைகளும், கிளைகளும், மற்ற பிற பாகங்களும் தத்தம் தேவைக்கு ஏற்ப பிரித்து எடுத்து கொள்கின்றது, இந்த ஒரு நிகழ்வு, 'நான்' வாழ வேண்டும் என்ற அடிப்படையில் நிகழும் ஒரு நிகழ்வு இதன் காரணமாக முழு மரமும் செழிப்படைகின்றது. மேற்கூறிய மரத்தை போலவே இன்றைய சமுதையத்தின் வளர்ச்சியும் இருக்கின்றது, 'நான்' வளமுடன் வாழ வேண்டும் என நினைத்து ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்கிறான் இதன் விளைவு பல தனி மனிதர்களின் வளர்ச்சி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியாக மாறுகின்றது. ஆனால் இந்த வளர்ச்சி பல நேரங்களில் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் போவதற்கு காரணம், சுயநலத்தின் அலுவுகோல் அதிகமாவது தான்.

'நான்' வாழவேண்டும் என ஒரு தனி மனிதன் நினைப்பது ஆக்கப்பூர்வமே, ஆனால் 'நான்' மட்டுமே வாழ வேண்டும் என்ற நினைப்போடு இருக்கும் பொழுது அது அழிவை ஏற்ப்படுத்துகின்றது. நம் வாழ்நாளில் தினமும் பல தடைகளை கடக்கிறோம், இந்த தடைகளை கடக்கும் வேளைகளில் நம் படிக்கற்கள் மற்ற மனிதர்க்கு தடைக்கல்லாய் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் வரையில், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வு நமக்கும் இந்த சமுதையதிர்க்கும் நன்மையே பயக்கும்.

நாம் பல வேளைகளில் மற்ற மனிதர்கள் செய்யும் செயல்களால் அவர்களை நாம் மதிப்பீடு செய்வதுண்டு, அப்படி நம்மை நாம் எத்தனை முறை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்? உண்மையில் நம்மை நாம் மதிப்பீடு செய்ய அஞ்சுகிறோம், நான்' என்கிற எண்ணம் நம்மதுக்குள் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பதால் நாம் பல வேளைகளில் மற்றவர்களுக்கு தடையாய் இருக்கிறோம், இதன் காரணமாய் நம்மை நாம் மதிப்பீடு செய்ய மறுதலிக்கிறோம், நாம் செய்யும் தவறை நமக்கு நாமே சுட்டிக்காட்டிக்கொள்ள மறுக்கிறோம்.' நான்' என்கிற உணர்வு அதிகமாக உருவகம் எடுக்கும் பொழுது அது ஒரு போதையாகி போகின்றது நாமும் அந்த போதைக்கு அடிமையாகி விடுகின்றோம். நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்ளும் வேலைய்களில் இந்த போதையின் அளவை நாம் குறைத்துக்கொள முடியும், நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற எண்ணமும் அளவைக்குள் அடங்கி ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.

- என்றாவது ஒரு நாள் மற்ற மனிதனின் கண்ணீருக்கு நான் காரணமாக இருந்து இருகிறேனா?
- நான் முன்னேற ஏதேனும் மனிதனுக்கு தடையை ஏற்ப்படுத்தி இருகிறேனா?

இதுபோன்ற கேள்விகளை நமக்குள் நாம் நிதம் கேட்டு கொண்டு நம்மை நாம் மதிபிட்டுக்கொள்ளும் வேளைகளில் நமக்குள் இருக்கும் 'நான்' என்கிற உணர்வு கட்டுக்குள் இருக்கும், நமக்குள் வரும் 'நான்' என்கிற உணர்வும் மற்றவருக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

எனவே நம் தனிமை பொழுதுகளில் நம்மை நாம் மதிப்பிட்டுக்கொள்வோம், மற்ற மனிதருக்கு நாம் தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.