மனிதனைத்தேடி


புதிய ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி, 'மனிதனைத்தேடி' இது இந்த பதிவின் தலைப்பு மட்டும் அல்ல பொருளடக்கமும் கூட. பிறக்கும் மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் பல கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தது அந்த கேள்விகளுக்கு எனக்குள் நான் எழுதிக்கொண்ட பதில்கள் தான் இந்த 'மனிதனைத்தேடி' என்கிற பதிவு.

இந்த பதிவை பல பகுதிகளாக கிறுக்குகிறேன்...எனக்குள் எழுந்த கேள்விகள் உங்களுக்குளும் எழலாம், அப்படி உங்களுக்குள் வாழ்க்கையை பற்றிய கேள்விகள் வரும் வேலையில் இந்த பதிவின் சில பகுதிகள் நிச்சயம் உங்களுக்கு உகந்தவையாக இருக்கும் என நம்புகிறேன்.
தொடர்ந்து வரும் பகுதிகளை படியுங்கள் என்னுடன் சேர்ந்து வாழ்கையின் தேடலில் கலந்துகொள்ளுங்கள்.

இவன்
உங்களில் ஒருவன்
அ. ஜோசப் கேமிலஸ்

குறுங்கதைகள்


நண்பன்...
வேகமாக ஓடிச்சென்று கூடி இருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேசென்றேன், அங்கே அடிபட்டு இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த என் நண்பன்கையில் உயிரோடு ஓடிக்கொண்டிருந்த என் கை கடிகாரத்தை கண்டு நிம்மதிபெருமூச்சுவிட்டேன்....


சுப்பு தாத்தா...

வரப்பின் ஓரத்தில் நடந்துகொண்டிருந்த சுப்பு தாத்தாவின் வலது காலில் சேர் அப்பிக்கொண்டது, அந்த சேற்றை எடுக்க சுப்பு தாத்தா தன் இடது காலால் வலது காலை துடைத்தார், இப்பொழுது வலது காலின் சேர் இடது காலில் அப்பிக்கொண்டது, பின் இடது கால் சேற்றை அகற்ற வலது காலால் துடைத்தார் பின் இடத்தும் வலதுமாக தொடர்ந்தார்...


புல் மேயும் ஆடு...

இன்று அந்த ஆட்டிற்கு கிடைத்த புல்லின் ருசி போல என்றுமே கிடைத்ததில்லை, எனவே ருசியில் மயங்கி புல்லை மேய்ந்தது அந்த ஆடு, அருகில் நின்றுகொண்டிருந்த நரியை கவனியாமல்.

பள்ளிக்கு போகணும்..
.

பள்ளியின்
அருகே அறிவொளி இயக்கத்தின் விளம்பர பலகையை எழுதிக்கொண்டிருந்தான் அந்த ஆறுவயது சிறுவன்...


தமிழே உன்னை வணங்குகிறேன்...


என்குரலில் என் தமிழ் தாய்க்கு ஒரு வாழ்த்துப் பாடல்.....