மனிதன் என்கிற மிருகம் - பாகம் 1

முகவுரை

"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்" - இன்றைய உலகம் சுவைத்து வரும் அபிரிமிதமான வளர்ச்சியும் கூட ஒரு விதத்தில் நஞ்சாகக்கூடிய அமிர்தம் தான்.




உலகம் தோன்றியது முதல் இந்த நிமிடம் வரை பல தாவர வகைகள் இருந்து மறைந்து போனது, பல மிருக வகைகள் இருந்த இடம் தெரியாமல் மாயமாகின இப்படி அழிந்து போன உயிரனங்கள் மனிதனைக் காட்டிலும் பலம் வாய்ந்தவை மனிதனைக் காட்டிலும் மிகபெரியவை ஆனால் அறிவு என்ற ஒரு புள்ளியில் மனிதன் இந்த மிருகங்களைக் காட்டிலும் உயர்நதவனாய் இருந்தான். அந்த அறிவு என்ற புள்ளி தான் இன்று வரை மனித இனம் அளியஹ்டு காது வந்திருக்கிறது. எந்த அறிவு மனிதனை இன்று வரை காத்து வந்ததோ அதே அறிவு இன்று மனிதனுக்கு ஆபத்தாக மாறிவருகிறது என்பதை உணர்த்துவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்த "மனித என்கிற மிருகம்" கட்டுரையை ஒரே பதிவில் சுருக்கி விட முடியாததன் விளைவாக, சில பாகங்களாக இதை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன்.

நெருப்பு, சக்கரம், உழவு, மொழி... இவற்றை மனிதன் கண்டுபிடிக்கும் முன் அவனும் ஒரு சாதாரண மிருகமாகத் தான் இருந்திருப்பான். உண்மையில் அந்த காலத்தில் மனிதனை மிருகங்கள் ஆண்டு கொண்டிருந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. விபத்தாக தான் கண்டு பிடித்த நெருப்பைக்கண்டு முதலில் மனிதனே அஞ்சி இருப்பான் பின் அவற்றைக் கொண்டு மிருகங்களிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கொண்டான், இருளில் வெளிச்சத்தை உண்டாக்கும் சூரியனாக நெருப்பை நினைத்தான், பிறகு மெல்ல மெல்ல நெருப்போடு நட்பாகி குளிர் காய்ந்தான், நெருப்பைக் கொண்டு மிருகச்சதை சமைக்க கற்றுக்கொண்டான். இப்படிதான் சக்கரத்தின் கண்டுபிடிப்பும் நிகழந்து மெல்ல மெல்ல அது தன் உருவம் பெற்றது, உழவும் மொழியும் இங்ஙனமே மனிதனுள் வளர பல கால ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
இப்படி மெல்ல மெல்ல நிகழ்ந்த மனித அறிவின் வளரசியல் மனிதன் நாகரிக வாழ்க்கைக்குள் நுழைந்தான் உலகத்து உயிரினங்களில் உயர்ந்தவனாக மாறினான்.

உணவு, புணர்ச்சி இவற்றை தவிர வேறு எதற்கும் எந்த மிருகமும் ஆசை பட்டதில்லை...மனிதன் உலகத்தில் தோன்றிய பல லட்சம் ஆண்டுகள் கடந்து தன் அறிவை அவன் உணர துவங்கும் வரை மனிதனும் அப்படிதான் இருந்து வந்தான். என்று மனிதன் தன் அறிவின் உன்னதத்தை உணர்ந்து கொண்டானோ அன்று முதல் மனிதனுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் மனிதனுக்கு பல விஷயங்கள் மீது பற்றுதலை அதிகப்படுத்தியது...கற்கள் கொண்டு தன் உறைவிடம் செய்ய ஆரம்பித்தான், பணம் கண்டு பிடித்து வணிகம் செய்ய கற்றுக்கொண்டான் கடலில் கப்பல் செலுத்தி கரைகளை கடக்கலானான். படி படியாக வளர்ந்த மனிதன் அது வரை நிகழ்ந்த மிக அளவான வளர்ச்சியால் மிருகத்தில் இருந்து தன்னை வேறு படுத்தி மனிதன் என்ற உருவம் அடைந்தான். அறிவின் வளர்ச்சி மனிதனின் ஆசையை மேலும் வளர்த்தது அறிவியல் செய்தான், மனிதனின் அறிவு மேலும் வளர்ந்தது அணுக்களை படித்தான், மனிதனின் அறிவுக் கண் மேலும் திறந்தது வின்வேளிகளையும் தொகுத்தான்...இப்படி இந்த மாற்றங்கள் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. மேற்கூறிய ஆசை மனிதனை மிருகங்களிடம் இருந்து பிரித்து தனிப்பட்டவனாக மாற்றியது மனிதன் என்கிற மிருகம் முழு மனிதன் ஆனான். ஆம் மனிதனை மனிதங்க மாற்றியது மனிதனின் ஆசை தான்.

இந்த ஆசை என்கிற உணர்வு அதிகமாக மாறியதன் விளைவு மீண்டும் மனிதன் மிருகமாக மாறினான்,....
"animal to man & man to animal again" இதை தான் இந்த கட்டுரையின் தொடர்ந்து வரும் பதிவுகளில் பார்க்கப்போகிறோம்

இந்த கட்டுரையின் தொடர்ச்சியில் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது - உங்களில் ஒருவன் - அ. ஜோசப் கேமிலஸ்

கோடை காலம்

இரவிலும்
காற்றில் நெருப்பின் நிறம்
பகலிலோ
மரங்களின் அசையா முகம்

வியர்வை துளியோடு
உயிரின்
சொட்டுக்கள் நிலம் முட்டும்
வெயிலின் தகிப்போடு
வெறுமை
தலை கொட்டும்

நீரின் நிறம்கூட ஆற்றில் இல்லை
நிலத்தின் நிழலிலும் ஈரம் இல்லை

கதிரவனின் கிரணங்கள் காற்றோடு கலக்கும்
இது கோடையின் காலம்
மனிதனை இயற்க்கை மறுதலித்த நேரம்



வாழ்வின் பொருள்....



இன்றோடு முடிவதில்லை இரவோடு மடிவதில்லை
வானம் நாம் பார்க்கும் வரை வாழ்க்கை அது ஓய்வதில்லை
இறப்பதற்கே யாரும் பிறப்பது இல்லை - ஆனால்
முற்றுபெறாத துவக்கங்கள் என்றும் அர்த்தங்கள் செய்வதில்லை


பிறப்பை போல் புதிரும் இல்லை,
இறப்பை போல் இருளும் இல்லை.
உயிரின் பொருள் உணர்ந்துவிட்டால்,
உயிர் வாழ்தலில் பொருளும் இல்லை.


கல்லறைகள் கற்பிக்கும்
படிப்பினை படித்தவன்
இழப்பையும் இழக்கிறான்
இருக்கையில் சிரிக்கிறான்


உல்லாசம் சில காலம்
உயிர் கரைந்து பல நேரம் - இன்
நியதியை உணர்ந்தவன்
நிம்மதியை ருசிக்கிறான்


மண்ணோடு விழுகையில்
நிழல்கூட நமதில்லை - நம்
உடல்கூட நிலையில்லை
நமக்காக நாம் வாழுகையிலும்

நான் என்ற சொல்லுக்கு
அர்த்தம் மட்டும் என்றுமே புரிவதில்லை

மனிதனைத் தேடி 3'ஆம் பாகம் - நிம்மதியும் வெற்றியும்



மீண்டும் ஒரு பதிவோடு உங்களில் ஒருவனாக உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிக்கொள்கிரேன்...

நேற்றும், இன்றும், என்றும் மனிதனின் ஆசை - நிம்மதியான ஒரு வாழ்க்கை

ஆனால் பெரும்பாலான நேரங்களில் நிம்மதி என்பது நமக்கு நரி தேடிய திரட்சைக்கனியாக எட்டாத உயரத்தில் இருக்கிறது, இதற்க்கு மிக முக்கிய காரணம் நம்மை நாம் இந்த உலகத்தில் தொலைத்துவிட்டது தான். எப்படி நமது வாழ்க்கையை நாம் தொலைத்தோம்? பின் வரும் கட்டுரையை படித்துப் பார்த்தல் உங்கள் வாழ்க்கையின் கடந்த காலமும் நிகழ் காலமும் உங்கள் கண்முன்னே நிழலாடும், அப்பொழுது வாழ்க்கையை நாம் தொலைத்துவிட்டு எப்படி வாழ்கிறோம் என்பதையும் அறிந்துகொள்வீர்கள்.

வாழ்க்கையை இப்படி வகுத்துக் கூறலாம்:-
நமது தேவை இன்னது என்பதை நாம் அறியாதவர்களாய் பல காலம்,
நமது தேவை இது என்று எண்ணி தவறான ஒரு தேடலில் இறங்கி பின் தெளிவுற்று பின்வாங்கி சில காலம்
நமது தேவை இன்னது என்று அறிந்திருந்தும், சூழ்நிலையின் காரணமாக நமது தேவையை மறந்து அல்லது மறுதலித்து சில காலம்,
நமது தேவை இன்னது என்று அறிய வரும் காலத்தில் நமது பருவங்கள் கடந்து விட்ட வருத்தத்தில் சில காலம்

நமது வாழ்க்கையின் கடந்த காலத்தை புரட்டிப் பார்க்கையில் இப்படித்தான் பல தோல்விகளும் வருத்தங்களும் நமக்கு மிஞ்சும்.... எட்டி இருக்கும் கணியை எட்டி பிடித்த வெற்றியாளர்கள் இந்த உலகத்தில் கொஞ்சமே, அவர்களை சந்தனையளர்கள் என்று உலகம் அழைக்கிறது, எஞ்சியவர்கள் சாமான்யன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். இப்படி சாமான்யன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதர்களின் ஆழ் மனதில் ஆறாத ஒரு வேதனை என்றுமே நிலைத்திருக்கும், அது அவன் தேடிய அவனது தேவை அவனுக்கு கிடைகாது போன வருத்தம், இந்த வருத்தம் தான் ஒரு மனிதனை நிம்மதி எங்கே என தேடசெய்கிறது....

உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டு பாருங்கள் நண்பர்களே, இன்று உங்களிடம் இருக்கும் உறவுகள், உடமைகள் உங்களுக்கு நிம்மதியை தருகிறதா என்று, பலருக்கு இதன் பதில் இல்லை என்றே தோன்றும் காரணம் நீங்கள் உங்களுக்கு வாய்த்தவற்றைக் கொண்டு வாழ பழகிக்கொண்ட சாமான்யன்கள். உங்களின் தேவைகளையும், தேடல்களையும் உங்களின் சூழ்நிலையால் மறுதலிக்கக் கற்றுக்கொண்ட உலகவாசிகள். இப்படி வாழ்வோர் தண்ணீருக்குள் அழும் மீனை போன்றவர்கள், உங்களின் வேதனையை நீங்கள் புன்னகை என்ற வர்ணம் பூசி மறைத்துக்கொள்ள தெரிந்த மந்திரவாதிகள்.

நமக்கு பற்றற்ற ஒரு சூலில் நம்மை நாம் புகுத்திக்கொள்வதால் நமக்குக் கிடைப்பது நிம்மதியற்ற வாழ்க்கை மட்டுமே. அலைகளை மோதிக் கிழிக்கும் கப்பல் மட்டுமே கரை சேரக்கூடும், நிலத்தை முட்டி முளைக்கும் விதைகள் மட்டுமே மரமாகக் கூடும்.

நண்பர்களே வெற்றியாளர்களை யாரும் பிறப்பால் செய்துவிடுவதில்லை, ஒவ்வொரு வெற்றியாளனும் தன்னுடைய தேடலை அறிந்தவனாய் இருக்கிறான் அந்த தேடலில் தன்னை முழுமையாக செளுத்திக்கொள்கிறான். நாமும் வெற்றிபெற நிமதியை நம் மனதிர்க்குதர நான் செய்யவேண்டியது இதுதான். நமது வாழ்க்கையின் பற்று இன்னது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அதை அறிந்து கொண்ட மறுகணமே அந்த பற்றுக்கான தேடலில் நம்மை நாம் செலுத்த வேண்டும். ஒரு நேர்த்தியான மாலுமி கப்பலை செளுதுவதைபோல நாமும் நமது வாழ்க்கையை நமக்கு பற்றுமிக்க செயலில் செலுத்தினால் நிம்மதியும் வெற்றியும் என்றுமே எந்த மண்டிதனுக்குமே எட்டாத கணியல்ல.

வாருங்கள் தோழர்களே நிம்மதி என்பது உலகெங்கும் உங்களுக்காகக கொட்டிக்கிடகின்றது ஆனால் உங்கள் விழிகளில் தான் ஏதோ ஒரு திரை விழுந்து நிம்மதியை மறைக்கின்றது. உங்களின் விழித்திரையை விசலமாக்குங்கள், அகச்சிரையை உடைத்தெறியுங்கள் நிம்மதியை சுவைத்து மகிழுங்கள்.

நிம்மதியாய் வாழ்ந்திட உனது தேவையை முதலில் அறிந்துகொள் பின் உனது தேவையை அடைய உன்னை நீ தயார் செய்துகொள் பிறகு வாழ்க்கை களத்தில் நம்பிக்கையோடு போராடு நிச்சயம் வெற்றியும் நிம்மதியும் உனக்கு என்றுமே உடனிருக்கும்...

மீண்டும் ஒரு பதிவோடு உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்களில் ஒருவன் அ. ஜோசப் கேமிலஸ்....நன்றிகள்