இயற்க்கைக்கு எல்லைகள் இல்லை...

இந்தியக்காற்று இங்கிலாந்தில் வீச யாரை கேட்கிறது அனுமதி
கால்கள் கொண்டேன் எல்லைகளும் கொண்டேன்...
பசபிக் பெருங்கடலின் துளி இந்தியப்பெருங்கடலில் கலக்க  கேட்பதில்லை அனுமதி
அரறறிவு கொண்டேன் என் உரிமைகள் இழக்க...
தமிழ்ப் புறாவும்  மராத்திப் புறாவும்  பேசிக்கொள மொழிபெதம் இல்லை
கல்வியும் கொண்டேன் சுருங்கிய அறிவோடே...
அர்டிக்கின் டால்பின் அட்லாண்டிக்கில் ஆட பாஸ்போர்ட் தேவை இல்லை
மனிதனானே எல்லைக்குள் அடங்கிப் போனேன்...

இயற்க்கை என்றும பேதம் கொண்டதில்லை அவை எந்த எல்லைக்குள்ளும் அடங்கியது இல்லை, மனிதர்கள் நாமும் இயற்கையின் அங்கம் தான் அனால் சிந்தித்து பாருங்கள் நண்பர்களை மேற்கூறிய எந்த ஒரு கருத்திலாவது மனிதன் என்பவன் இயற்கையின் மற்ற அங்கங்களை  போல சுதந்திரத்தை அனுபவிக்காதவன். உண்மையில் மனிதனுக்கு இயற்கையை அடக்கி ஆளத்தான் ஆசையே தவிர இயற்கையை அனுபவித்து வாழ ஆசைப்படுபவன் இல்லை.


இயற்கையாய் வாழ எல்லைகளை தகர்ப்போம்...அன்பு கொள்வோம் அதுவே இயற்கையின் வலி...எல்லைகள் மறந்தால் தொல்லைகள் இல்லை...

மிச்சம்...

பசித்த பின் உண்பவனுக்கு  பஞ்சம் மட்டும் மிச்சம் - இங்கே
பணமிகு மனிதர்க்கு நோய் நொடியே மிச்சம்
உழுதவனுக்கு  ஏர் மிச்சம்
நெய்தவனுக்கோ தறி மிச்சம்
கொடுதவனுக்கோ  தேய்ந்த செருப்பு  மிச்சம்
வாங்கியவனுக்கு கடன்கார பட்டம் மிச்சம்
செத்தவனுக்கு உடல் மிச்சம்
நடப்பவனுக்கு நாளைய நாள் மிச்சம்
காத்திருத்தல் காதலனுக்கு மிச்சம்
காத்திருந்தால் காதல் என்றுமே மிச்சம்
கல்யாணம் ஏழை பெண்ணுக்கு மிச்சம்
குழந்தையோ மலடிக்கு மிச்சம்
முதுமையில் தனிமை மிச்சம்
இளமையில் கல்வியே மிச்சம்
முத்தங்கள் காதலின் மிச்சம்
சப்தங்கள் மௌனத்தின் மிச்சம்
உலகமே கதிரவன் மிச்சம்
படைத்தவன் தூவிய எச்சம்