சின்ன சின்னதாய் - 2


கருவுற்றிருந்தால் - நீ
ஒரு பிள்ளைக்கு தாய்,
கருணையுற்றதால் - நீ
உலகிற்கே தாய்
அன்னை தெரேசா!!!


சட்டையும் காலுறையும்
பொதுவாகிப் போனதால்- தனி
அடையாளம் தேடுகிறோம்...
ஆண்கள்!!!

முயற்சிக் கதவுகளையல்ல
தேடல் ஜன்னல்களையேனும் திறந்துவிடு
உன் வாழக்கையில் வர காத்திருக்கிறேன்
வாய்ப்பு!!!

கலாச்சாரத்தின் கற்பழிப்பு,
காலதேவனின் ஆடை அவிழ்ப்பு
நாகரீகம்!!!



வரி வழியே அரசாங்கம் வாழ
குடி வழியே மக்களை கொள்ளும்
மழிவு விலை அநியாயக் கடை
டாஸ்மாக்!!!







3 comments:

  1. ohhh joe....guys neleme ivvelo poor accha.....im realy sorry 4 u guys....hopefuly u guys can find a new identity soon....

    ReplyDelete
  2. வரி வழியே .....குடி வழியே ...wonderful word selection pa.....keep up de gud work...expecting more poems frm u....

    ReplyDelete
  3. myvi...thank you for ur comments, really u guys do encourage me alot...

    ReplyDelete